Monday, July 26, 2010

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.

க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும்.

பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அ‌ப்படி செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம்.

மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

எடையை குறைக்கஎடையை குறைக்க

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

பன்றிக்காய்ச்சலை துளசி குணப்படுத்தும்; ஆயுர்வேத நிபுணர்கள் தகவல்

http://linoj.do.amஉலகை மிரட்டிக் கொண்டிருக்கும் அதி பயங்கர நோய்களுள் பன்றிக்காய்ச்சலும் ஒன்று. இந்தக் காய்ச்சல் மிக வேகமாக பரவும் தன்மை உடையதால் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்கள் முக கவசம் அணிந்து வெளியில் செல்கிறார்கள்.

இப்படிப்பட்ட பன்றிக்காய்ச்சலை துளசி இலைகள் ஒன்றிரண்டு நாட்களில் விரட்டி அடித்து விடும் என்கிறார்கள் இந்தியாவின் புகழ் பெற்ற ஆயுர்வேத நிபுணர்கள்.

பிரபல ஆயுர்வேத நிபுணர் டாக்டர் யு.கே.திவாரி கூறும் போது, வைரஸ் மூலம் பரவும் தொற்று நோய்களை "துளசி" மூலம் எளிதில் குணப்படுத்த முடியும். இதே போல் பன்றிக்காய்ச்சலை குணப்படுத்துவதும் எளிது.

துளசி இலைகள் சாப்பிட்டால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள தொற்று நோய் கிருமிகளும் அடியோடு ஒழியும் என்றார்.

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேத பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் புபேஸ் பட்டேல் கூறும்போது:-

"துளசி" இலைகள் மூலம் பன்றிக் காய்ச்சலை மிக எளிதாக குணப்படுத்தி விடலாம். இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 20 அல்லது 25 துளசி இலைகளை தினமும் 2 தடவை சாப்பிட வேண்டும்.

இந்த இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்தவித தொற்றுக்கிருமியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது என்றார்.

பன்றிக்காய்ச்சலை இஞ்சி,வெங்காயம், பூண்டு குணப்படுத்தும்

பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவுகிறது. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இடைவிடாத சளி, இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளது. இது ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தொற்று நோய்.

முதன் முதலில் மெக்சிகோ நாட்டில்தான் பன்றிக்காய்ச்சலுக்கான நோய் கிருமி உருவானது. நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கிருந்து காற்றின் மூலம் மற்ற உலக நாடுகளுக்கும் பரவியது.

இந்த நோய் தாக்கப்பட்ட மனிதன் இருமல், தும்மல் மூலம் நிமோனியா காய்ச்சலுக்கு ஆளாகிறான். பிறகு நுரையீரல் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழுக்க ஆரம்பிக்கும்.

பன்றி காய்ச்சலுக்கு டேமி புளு மாத்திரை எடுத்துக்கொண்டால் நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று ஆங்கில மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கான தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை.

பன்றிக்காய்ச்சல் தாக்கினால் பயமோ, பதட்டமோ தேவை இல்லை. 7 நாட்களுக்கு கண்டிப்பாக அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்தால் அதன் பிறகு தாக்கம் குறைந்து விடும்.

இதற்கிடையே சித்த மருத்துவத்தின் மூலம் பன்றிக்காய்ச்சலை வரும் முன்னே தடுத்து விடலாம் என்று அரும்பாக்கம் மத்திய அரசு சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய உதவி இயக்குநர் டாக்டர் ஜெகஜோதி பாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

பன்றிக்காய்ச்சல் வைரஸ் கிருமியானது சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலாலும், நோய், எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களிடமும் இந்த வைரஸ் எளிதில் தொற்றி விடும்.

உடலில் சளி பிடிக்காமல் இருப்பதன் மூலம் வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். ஆடா தொடா, அரசை, அதி மதுரம், கண்டங்கத்திரி, திப்பிலி போன்றவை மார்பு சளியை வெளியேற்றும் தன்மை கொண்டவை.

என்றாலும் சளி பிடிக்க விடாமல் தடுக்கும் சிறப்பு மருத்துவ குணம் இஞ்சிக்கு மட்டுமே உண்டு. உணவில் அதிக அளவில் இஞ்சி, சுக்கு, வறுத்த வேர்க்கடலை, முந்திரி, அக்ரூட், பாதாம், பூமி சர்க்கரை கிழங்கு, பூனைக்காலி அமுக்ராங் கிழங்கு போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதன் மூலம் சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை சித்த மருத்துவத்தில் அதிகாரப்பூர்வ மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கை மூலம் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் பன்றிக்காய்ச்சலை தடுக்கும் அற்புத மருந்துகள் இயற்கை மூலிகைகளில் கிடைப்பதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறியுள்ளனர். அவர்கள் தெரிவித்து இருப்பதாவது:-

பன்றிக்காய்ச்சல் நோய் தாக்காமல் இருக்க இந்திய இயற்கை மூலிகைகளான வேம்பு, துளசி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்ந்து வர வேண்டும். இவை உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. ஆங்கில மருந்துகளை சாப்பிட்டபோதும் இயற்கை மூலிகைகளை சாப்பிட்டு வரலாம்.

வேம்பு நீரிழிவு நோயை தடுப்பதுடன் வைரஸ் கிருமிகள் மனிதனை தாக்காமல் எதிர்ப்பு சக்தியாக செயல் படுகிறது. காய்ச்சலையும் குறைக்கும். ப்ளு காய்ச்சல், தொண்டை வறட்சி, சளி, அலர்ஜி, தோல் வியாதிகள், மலேரியா போன்றவற்றுக்கு வேம்பு ஒரு தீர்வாகும்.

மற்றொரு இயற்கை மூலிகையான துளசி பாக்டீரியாக்களை கொல்கிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

வெங்காயத்தில் பல்வேறு வைரஸ் எதிர்ப்பு ரசாயன பொருட்கள் உள்ளன. தேவைப்படும் போதெல்லாம் அவற்றை சாப்பிடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.

இதேபோல் பூண்டும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. பாக்டீரியா வைரஸ்களை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உள்ளது. ரத்தத்தை சுத்தி கரித்து இலகுத்தன்மையாக்குகிறது.

இது தவிர பன்றிக்காய்ச்சல் வராமல் தப்பிக்க அனைத்து வகையான மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறி உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

மாமிச உணவு தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் வைரஸ் எளிதில் தாக்கும் ஆபத்து உள்ளது.

இவ்வாறு ஆயுர்வேத நிபுணர்கள் கூறி உள்ளனர்.

நல்ல தூக்கம் எடையை குறைக்கும்

http://linoj.do.amஅதிக நேரம் தூங்கினால், எடை குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவ மையத்தில் சர்வதேச டாக்டர்கள் மற்றும் நிபுணர்கள் குழுவினர் நடத்திய ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வால்டர் ரீட் மருத்துவமனையை சேர்ந்த நர்ஸ்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதில், நன்றாக தூங்குவோரை விட, குறைந்த நேரம் தூங்குவோருக்கு எடை அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

குறைந்த நேரம் தூங்குவோருக்கு, பசி அதிகரித்து, அதிகளவில் உட்கொள்கின்றனர். வளர்சிதை மாற்றத்தின் போது, அவர்களின் எடை அதிகரிக்கிறது என்பது நிரூபணமானது.



"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து பாதுகாக்கும்
பால் சேர்க்காத "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும் என ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.

இத்தாலியின் லாகிலா பல்கலைக்கழகம், லிப்டன் தேயிலை நிறுவன ஆதரவுடன் பிளாக் டீ அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வு சுமார் 33 வயதிலிருக்கும் ஆரோக்கியமான 19 ஆண்களிடம் நடத்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 5 முறை பால் சேர்க்காத நறுமணப்பொருள்கள் சேர்க்கப்பட்ட தேநீர் கொடுக்கப்பட்டது. ஒருவாரம் இதேபோல் கடைபிடிக்கப்பட்டது. இதனால் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் நாளடைவில் நறுமணப் பொருள்கள் அடங்கிய உணவு, பானங்களை ஒதுக்கிவிட்டு பால் சேர்க்காத தேநீரையே விரும்பி அருந்துகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. பால் சேர்க்காத தேநீர் அருந்துவது ரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்த நாளங்களின் மீள்தன்மையை அதிகரிக்கின்றன.

தினமும் ஒருவேளை பால் சேர்க்காத தேநீர் அருந்தினால் இதயநாளங்கள் வலுப்படும் எனப் பேராசிரியர் கிலாடியோ ஃபெரி தெரிவித்தார். உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்களால் அருந்துவது தேநீர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீரே நல்ல மருந்து!

எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான். ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம்.

இந்த அறிகுறிகளை அறிவிப்புகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது. எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று.

இதற்கு என்ன காரணம்-? போதுமான அளவில் உடம்புக்கு நீர் கிடைக்காவிட்டால் அங்கே என்ன நிகழும் என்ற விவரம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் வியாதிகள் தொடக்கத்திலே அடக்கப்படுகின்றன. தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண யுக்திகளில், தண்ணீர்தான் பெரும்பங்கை ஏற்றுள்ளது.

உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே எழுபது சதவிகிதமாகும். உடலின் அனைத்துப் பாகங்களிலும் அது வியாபித்திருந்தாலும், மூளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர், நிணநீர் போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.


தண்ணீர் பெரும்பாலான இடங்களில் மிகக் கணிசமாகவே கிடைக்கப் பெறுகின்றன. இரு வழிகளில் தண்ணீர் வரப்பெறுகின்றன. பூமிக்கடியிலும், பூமியின் மேற்பரப்பிலும் (அதாவது மழைநீர்).

மேற்பரப்பு நீர், சாதாரணமாகவே மென்மையாகவும், நிலத்தடி நீர், கடின நீராகவும் இருக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால், நிலத்தடி நீரில் தாதுப் பொருட்கள் நிரம்பவே அடங்கியுள்ளன. கடின நீரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மென்னீர் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாகும். அதேநேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே நினைவில் கொள்ளவேண்டும், அதாவது, மென்னீர் தூய்மையற்றுப் போய்விடுமானால் அதுவே உடற் கோளாறுகளை உருவாக்கிவிடும்.

எனவே தான் குடிப்பதற்கும், மருத்துவத்திற்கும் தண்ணீரைப் பயன்படுத்தும் போது, அதனைச் சுத்தப்படுத்தப்பட வேண்டியது மிக அவசியமாகும்.

பல நூற்றாண்டு காலமாகவே பண்டைய எகிப்தியர்கள், ஹீப்ரூக்கள், கிரேக்கர்கள், பெர்சியர்கள் மற்றும் இந்துக்கள் ஆகிய நாட்டவர்களுக்குத் தண்ணீர் பல்வேறு வியாதிகளுக்குப் பிரிக்க முடியாத பிரதான அங்கமாகவே இருந்துள்ளது. ஏசு பெருமானுக்கு முன்னரே, பல நூற்றாண்டு காலமாகவே, தண்ணீரை மருந்தாகவே பயன்படுதியுள்ளனர்.

அறிவை அதிகரிக்கும் மீன் உணவுகள்!

http://linoj.do.amநீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்கள்.

ஆய்வு முடிவில், வாரத்திற்கு ஒன்றும் மேற்பட்ட முறை மீன் உணவு உட்கொண்டவர்கள், அதைவிட குறைவாக மீன் உட்கொண்டவர்கள் மற்றும் மீனே சாப்பிடாதவர்களைக் காட்டிலும் அதிக அறிவுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, `15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை பெற முடியும். அதனால், மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது' என்றனர்.

சூரியப் படுக்கைகள் (Tanning Beds) ஆசனிக் போன்று ஆபத்தானவை

http://linoj.do.amசூரியப்படுக்கைகள் (sun beds அல்லது Tanning Beds) என்று அழைக்கப்படும் புறஊதாக் கதிர்ப்புக்கள் (ultraviolet) கொண்டு ஆக்கப்பட்டுள்ள படுக்கைகள் உடல் நலத்துக்கு தீங்கானவை என்றும் அவை ஆசனிக் மற்றும் நச்சு வாயுக்களுக்கு (Mustard Gas) இணையாக மனிதரை சிறுகச் சிறுகக் கொல்லும் இயல்புடையன என்றும் குறிப்பாக தோல் மற்றும் கண் புற்றுநோய்களின் பெருக்கத்துக்கு காரணமாக இருக்கின்றன என்றும் சமீபத்திய பல ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.


முன்னர் புறஊதாக் கதிர்ப்புகளில் ஒருவகை மட்டுமே புற்றுநோய்க்குக் காரணம் என்று கூறப்பட்டு வந்துள்ள நிலையில் அனைத்து வகை புறஊதா கதிர்ப்புகளும் ஏதோ ஒருவகையில் மரபணு அலகுகளில் மாற்றங்களை உண்டு பண்ணி புற்றுநோயை உருவாக்கவல்லனவாக இருக்கின்றமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.


தங்கள் மேனியை இளமையோடு மிளிர வைக்க என்று இளம்பராயத்தினரில் 30 வயதிற்கு உட்பட்ட பலர் இந்த சூரியப்படுக்கைகளைப் பாவிக்கத் தொடங்கிய பின் அவர்கள் மத்தியில் தோற் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்திருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.


நடத்தப்பட்ட 20 ஆய்வுகளில் இருந்து இந்த சூரியப் படுக்கைகளைப் பாவித்த இளம் வயதினரிடையே 75% புற்றுநோய் தாக்க அதிகரிப்பு இனங்காணப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


சூரியப் படுக்கைகளை அறிமுகப்படுத்திய விஞ்ஞானமே இப்போது அதன் ஆபத்துக்கள் பற்றியும் எச்சரிக்கின்றது என்பது ஒரு வகையில் ஆச்சரியத்தையும் இன்னொரு வகையில் விஞ்ஞானிகளின் அறிவிப்புக்கள் குறித்த கேள்விக் குறியையும் எழுப்பி நிற்கிறது.

தேனீக்கள் தயாரிக்கும் மருந்து.

சமுதாயமாக வாழப் பழகிக் கொண்டுள்ள தேனீக்கள் தங்களின் மெழுகாலான கூட்டை நுண்கிருமிகளில் இருந்து சுத்தப்படுத்தி வைத்திருக்க என்று ரெசின் (resin) என்றழைக்கப்படும் ஒருவகை உடலிரசயானத்தைச் சுரந்து அவற்றினை மெழுகோடு கலந்து கூடுகளை அமைப்பதாகவும் அந்த ரெசின் இரசாயனம் பக்ரீரியாக்கள், வைரசுக்கள் என்று நுண்ணங்கிகளின் வளர்ச்சியை தடுக்கக் கூடிய இயல்பைக் கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாகவே தேன் உடல்நலத்துக்கு நல்லது என்பார்கள். ஆனால் இப்போது தேன்கூட்டில் இருக்கும் தேனீக்களின் சுரப்பான இந்த ரெசின் என்ற கூறு மனிதர்களில் நோய்களை உருவாக்கக் கூடிய பக்ரீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்கிருமிகளை மற்றும் புற்றுநோய்க் கலங்களின் பெருக்கத்தைக் கூட கட்டுப்படுத்தப் கூடிய இயல்பைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

அதுமட்டுமன்றி தேன்கூட்டில் இருக்கும் இந்த இரசயானம் எயிட்ஸ் வைரஸான HIV- 1 இன் மீது கூட தாக்கம் செய்வதாகக் கண்டறிந்துள்ளனர். ஆனால் அதன் தாக்கத்தின் விளைவுகள் குறித்து தெளிவாகச் சொல்லப்படவில்லை.

தேன் உடலுக்கு நல்ல மருந்து என்று எம் மூதாதையோர் அனுபவத்தில் பகிர்ந்து கொண்டது உண்மையாகவே இப்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது. அதற்காக நம் மூதாதையோர் சொன்னவை எல்லாம் அறிவியல் மயமானவை என்பது பொருள் அல்ல. மூடநம்பிக்கைகளும் இருக்கின்றன. ஆனால் எதனையும் அறிவியல் கொண்டு நிறுவ முதல் மூடநம்பிக்கை என்று தட்டிக்கழிப்பது கூடாது என்பதையே இந்தக் கண்டுபிடிப்புக்கள் உணர்த்துகின்றன.

பாலுறவு சிக்கல்களைக் கண்டறிவது எப்படி?

பெரும்பாலான பாலியல் பிரச்சனைகள் மனம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. இதனால் உடல் ரீதியான காரணங்கள் இல்லை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. திருமணமான தம்பதியர் என்னிடம் ஆலோசனைக்கு வந்தனர். கணவனால் பூரணமாக பாலின்பச் செயலில் ஈடுபட முடிய வில்லை என்றும், இதன் காரணமாக தமக்கு மிகுந்த துன்பம் உள்ளதாக அந்த பெண்மணி கூறினார். காரணத்தை ஆராய்ந்த போது, அவள் மீது ஒரு வகை துர்நாற்றம் வீசுவதாகவும், அந்த நாற்றம் உடல் உறவின் போது அதிகமாக இருப்பதாகவும், அதன் காரணமாக தன்னுடைய உறுப்பு விறைப்பினை பெறுவதில்லை என்றும் காரணம் சொன்னார் அந்த வாலிப வனப்பு மிக்க இளைஞன். வேறு ஒரு ரகசியத்தையும் அவர் கூறினார். வேறு பெண்களோடு மிகவும் திருப்தியான உறவைக் பொள்ள முடிவதையும், அவனிடம் பெறும் அனு பவத்திற்காகவே சில குடும்ப பெண்கள் கூட தன்னிடம் வருவதாக சொன்னார்.

இதைப்போலவே மனம் சார்ந்த பிரச்சனை களில், பாலியல் சிக்கல்களும் ஒரு வெளிப்பாடாக அமைகிறது. பாலியல் பிரச்சனைகள் பற்றி முக்கிய மாக அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது இரண்டு அம்சங்கள். ஒன்று இந்தப் பிரச்சனைகள் பொதுவானவை. மற்றொன்று தற்காலிகமானவை. எல்லோருடைய வாழ்விலும் பாலினப் பிரச் சனைகள், சிக்கல்கள் வந்து பின்பு மறைந்து போய் இருக்கும்.

பாலுறவு சிக்கல்கள் - இரு பாலினரிடமும் தோன்றுவதாக இருந்தாலும், ஆண்களே இதனை வெளியில் காட்டிக் கொள்கின்றனர். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே வைத்து சுமக்கின்றனர். சிலர் தங்களின் நம்பகமான ஒரு சிலரிடம் பேசுவதுண்டு. இன்றுள்ள சமூக அமைப்பு உளநோய்கள் பற்றி பிறரிடம் பேசுவதைக் கூட களங்கமாக எண்ணுகிறது. தயக்கம் காட்டுவ தற்கு இது ஒரு காரணம். எனவே மன நல ஆலோச கர்கள் எப்படி இப்பிரச்சனையை அணுகுவது என்பதில் நுட்பம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு கேட்காத, இடையூறு இல்லாத தனிமையான இடமாக இருப்பது அவசியம். குடும்ப பிரச்சனைகளுக்கு பின்னணியில் பாலின்ப சிக்கல் இருக்கிறதா என அறிவது அவசியம்.

உடல் உறவு திருப்தியாக உள்ளதா என்பதை அறிய குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது? கடைசி யாக உறவு கொண்டது எப்போது என்பது போன்ற விபரங்களைக் கேட்பது அவசியம். கேள்விகள் கேட்கும் போது ஏனோ தானோ எனக் கேட்காமல் ஈடுபாட்டுடன், உண்மையான அக்கறையுடன் கேட்பது நல்லது. பாலியல் விழிப்புணர்வு உள்ளவர் களிடம் நேரடியாக கேட்கலாம். என்னிடம் ஆலோ சனைக்கு வந்த ஒரு பெண்மணி, தனது வயதுக்கு வந்த இரண்டு மகள்களின் முன்பாகவே, “எனது கணவர் தினந்தோறும் உடல்உறவு கொள்ள முயற்சிக்கிறார். இவர்கள் திருமணமாகாமல் வீட்டிற்கு இருக்கும்போது, இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறார். முடியாது என்றால் அன்று ஒரு ரணகளமாகவே வீடு மாறி விடுகிறது. என்ன செய்வது?” என்று கேட்டார்.

இப்படி கேட்டது அவரது மகள்களிட மிருந்த ஆதங்கத்தை சமனப்படுத்த பயன்பட்டது. அவர் தான் அப்படி என்றால் “ஏன் எங்களது அம்மா அதற்கு சம்மதிக்க வேண்டும்?” என்று அவர்கள் கேட்டனர். அதற்கு பதிலாக அமைந்தது தான் அந்த தன்னிலை விளக்கம், பாலுறவு சிக்கல் பற்றி, முழுமையாக, அதன் வகை, தன்மை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனை எப்போது ஏற்பட்டது? எல்லா நாட்களிலும் உள்ளதா? எப்போது கூடுதலாக உள்ளது? முன்பு எப்படி இருந்தது? இது பற்றி துணைவியின் அபிப்ராயம் என்ன? என்பது பற்றி அறிவது அவசியம்.

பெண்களோடு பேசும் போது, ஒரு பெண் உதவியாளரை வைத்துக் கொள்வது நல்லது. திருச்சியைச் சேர்ந்த ஒரு மனநல மருத்துவர், தன்னிடம் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாக ஒரு பிரச்சனை எழுந்தது. என்னிடம் ஆலோசனைக்காக அழைத்து வரப்பட்ட ஒரு புதுமணப் பெண் தன்னை இவ்வாறு பலாத்காரம் செய்து உடல் உறவு சுமுகமாக இருக்க என்ன செய்வது, எப்படி செய்வது? என்பதைச் சொல்லித் தருவதாக கூறி பின்பு மயக்க மருந்து கொடுத்து தவறாக முயற்சி செய்ததாகக் கூறினார். மயக்க மருந்து கொடுக்கும் நிபுணர்கள் மீதும் இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறுவதுண்டு. எனவே மனநல ஆலோசகர்கள், தங்களோடு ஒரு பெண் உதவியாளரை வைத்துக் கொள்வது பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.

வங்கி ஒன்றில் பணிபுரியும் கணேஷ் தன்னால் முன்பு போல உடல் உறவில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்றும், விறைப்பில்லாமையுடன், பெண் உறுப்புக்குள் செலுத்த இயலாமையும் உள்ளது என்றும் வேதனைப்பட்டார். இதற்கான காரணத்தை அறிய அவரது மனைவியிடம் கலந்து ஆலோசித்த போதும் சரியான தெளிவு கிடைத்தது. வீட்டில் ஒரு பிரச்சனை காரணமாக அவர்கள் வெளியேறி, வேறு ஒரு வீட்டிற்கு சென்றனர். அங்கு பூரணமான தனிமையான இட வசதி இல்லை. பல குடுத் தனங்கள் உள்ள வீடு. அங்கே உடல் உறவு கொள்ள போதுமான பாதுகாப்பு இல்லை என்கிற ஒரு பயம் கணேஷ்க்கு ஏற்பட்டது. யாராவது பார்ப்பார் களோ, வந்து விடுவார்களோ என்கிற பயம் வாட்டியது. பக்கத்து போர்ஷன்காரர்கள் வெளியே

சென்றிருந்தாலும் கூட, அவர்கள் எப்போது திரும்பி வந்து கதவைத் தட்டுவார்களோ... என்கிற பதைபதைப்பு வாட்டும். இதனால் ஏற்பட்ட மனத்தடை, திரும்பவும் தனது சொந்த வீட்டிற்கு சென்ற பிறகும் தொடர்ந்தது. மன அமைதிப் பயிற்சியை அளித்து அவரை பழைய நிலைக்குத் திருப்பினேன். ஓரினச்சேர்க்கை, சுய பாலின்பச் செயல், இரவில் விந்து வெளியேறுவது போன்ற பிரச்சனை களுக்கு ஆலோசனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இச்செயல் களால் ஏற்படும் மனப் போராட்டங்கள், குற்ற உணர்வுகள் களையப்பட முறையான சைக்கோ தெரபி தேவைப்படுகிறது.



வாயை சுத்தமாக, துர்நாற்றமின்றி வைக்க இதோ சில வழிகள்...
சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவு, வாயில் சிறிது நேரம் தங்கி விட்டால், துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. அதனால் சாப்பிட்டவுடன் பல் தேய்ப்பது நல்லது. இது பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை சுத்தம் செய்யும்.

காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பதைப் போல், இரவு படுக்கும் முன் பல் தேய்ப்பதும் முக்கியம்.

பல் தேய்க்கும் போது பல்லில் மட்டும் கவனம் செலுத்தினால் பத்தாது. ஈறுகள், நாக்கு இவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும். பல்லை விட இவை மிருதுவானவை என்பதால் பல்லில் காட்டும் வேகத்தை சற்றே குறைத்துக் கொள்வது நல்லது.

ஃபிளாஸ் (குடடிளள) செய்வதால் பற்களின் இடையே உள்ள பொருட்களையும் சுத்தம் செய்யலாம். இதை செய்வதால் வாய் துர்நாற்றத்தை போக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என்றால், உபயோகித்து முடித்தவுடன் ஃபிளாஸை முகர்ந்து பார்க்கவும்!!! அதன்பிறகு ஒரு நாளும் ஃபிளாஸை மறக்க மாட்டீர்கள்.

பல் தேய்த்த பிறகு மவுத்வாஷால் வாயை கொப்பளிப்பதால் நீண்ட நேரத்திற்கு துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.

அஜீரணம், பசி, இவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம். அதனால் சாப்பாட்டில் கவனம் செலுத்தவும், ஒரே நேரத்தில் முடிந்த வரை சாப்பிடாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய அளவில் சாப்பிடுவது சிறந்தது. சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீராவது குடிக்கவும். இது அஜீரணமும் பசியும் ஏற்படாமல் தடுக்கும்.

மூக்கடைப்பு, சளி இவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம். நறுமண மென்த்தால் மாத்திரைகள் இதற்கு உதவும்.

இவற்றை எல்லாம் செய்த பிறகும் வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும். சில நேரங்களில் கல்லீரல், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களாலும் இந்நிலை உருவாகலாம்.

என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?

இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.


ஆப்பிள் : இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும்.

திராட்சை : பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.

ஆரஞ்சு : காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.

மாதுளை : வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.

வாழைப்பழம் : மூட்டுவலி, சிறுநீரகக்கோளாறு, காசநோய், அலர்ஜி

பப்பாளி : பசியின்மை, வயிற்றுப்பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும், மேனியை பளபளப்பாக்கும்.

நெல்லிக்கனி : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தூக்கமின்மை, உடல்கொழுப்பு குறைய, இளநரை, முடி உதிர்வு நிற்க உதவும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம்

குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க சீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு. முதலில் குழந்தைகளுக்கு பழச்சாறுகள் மட்டுமே கொடுக்க வேண்டும், ஆரஞ்சு சாற்றை வென்னீரில் 50 : 50 என்ற விகிதத்தில் முதலில் கொடுக்கலாம். பழங்கள், பழச்சாறுகள் உணவு முறையை மேலும் 2 நாட்களுக்கு கொடுத்து வந்தபிறகு, சீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.

சீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. சீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.

மேலும் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவியாக இருக்கும் :

1. உணவு அருந்தும்போது தண்ணீர் அருந்தக் கூடாது, சாப்பிடும் முன் அரை மணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து நீர் அருந்தலாம்.

2. சாப்பிடுவதில் அவசரம் கூடாது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.

3. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

4. பசியில்லாதபோது சாப்பிடக் கூடாது.

உடல் பருமனைக் குறைப்பது எப்படி?

1. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கோதுமை, சோளம், பார்லி போன்றவற்றின் அளவை உங்கள் உணவில் அதிகப்படுத்தவும்.

2. மைதா மற்றும் மைதா வகை உணவுகளான ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றை உங்கள் தினசரி உணவுகளிலிருந்து தவிர்க்கவும்.

3. கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும். அசைவ உணவுகளே பெரும்பாலும் கொழுப்பின் உற்பத்திக் காரணிகளாக விளங்குகின்றன. வெண்ணெய், நெய், வனஸ்பதி, தேங்காய் போன்றவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்களே நம் உடம்பில் கொழுப்பாகவும் வளர்சிதை மாற்றம் அடைகின்றன.

4. நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும்.

5. பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளவும். இவை உங்களுக்குத் தேவையான அளவு வைட்டமின்களையும், தாதுச் சத்தையும் நார் சத்தையும் தருகிறது. நார் சத்து ஜீரணத்திலும், இரத்தக் குழாய், உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

6. உப்பின் அளவையும் குறைக்கவும்

7. ஒரே நேரத்தில் அதிக அளவிலான உணவை உடலுக்குள் திணிக்க வேண்டாம்

8. அதே நேரத்தில் சாப்பிடாமலும் இருக்க வேண்டாம்.

9. உணவு உட்கொள்ளும் நேரத்தை சீராக கடைபிடிக்கவும்.

10. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டேயும் சமைத்துக் கொண்டேயும் சாப்பிடும் பழக்கத்தை விடவும்.

11. ஒரு நாளில் 6 முதல் 8 தம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.

12. சீரான உடற்பயிற்சியில் ஈடுபடவும். தினமும் 20-40 நிமிடம் நடை பழகவும்

பசியும் உணவுப் பழக்கங்களும்

நம் உடல் நம் தாயின் வயிற்றில் கருவாக உருப்பெரும் முதல் மரணம் வரை இயங்கிக் கொண்டே உள்ளது. உடல் இயக்கத்திற்குத் தேவையான சத்துக்கள் உணவின் மூலமே கிடைக்கின்றன. தாயின் வயிற்றில் கருவாக, உயிர்பெற்று, கரு வளர்ச்சிக்குக் காரணமான உணவு, கருப்பையில் குழந்தையோடு வளரும் ‘நஞ்சு’ (உண்மையில் அது நஞ்சல்ல, உணவுச் சேமிப்பு கிடங்கு) மூலம் தாய் உட்கொள்ளும் உணவு குழந்தைக்கும் செல்கிறது. நஞ்சிலிருந்து வெளிப்படும் தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு உணவு செல்கிறது. கரு உருவாகும் பொழுது ஏற்படும் உணவுத் தேவை மரணம் வரை நிகழும் ஒரு தேவையன்றோ!

நம் மூளையின் ஒரு பகுதியான கீழ்முகுளம் நம் உணவுத் தேவையை கட்டுப்படுத்தும் உணர்வுகளைத் தோற்றுவிக்கும் உறுப்பாகும். உடலிற்கு சத்துத்தேவை ஏற்படும்பொழுது இப் பகுதி அதை உணர்ந்து வயிற்றிற்குச் செல்லும் நரம்புகளை தூண்டிவிடுகின்றன. உடனே நமக்கு பசி உணர்வு ஏற்படுகிறது. நாமும் உணவை நாடுகிறோம். எல்லா உயிரிகளுக்கும் பொதுவான ஒரு நிகழ்வாக உள்ளதே இந்த நிலைதான். பொதுவாக ‘பசி’ என்ற நிலை இல்லாவிடில் நாம் உண்ண வேண்டும் என்றே நினைக்க மாட்டோம்’. ‘பசித்தபின் புசி’ என்ற பழமொழியும் நாமறிவோம். பொதுவாக ‘பசி உணர்வு’ என்பது மகிழ்ச்சியான உணர்வல்ல.

கீழ்முகுளத்தால் உடல் சோர்வு உணரப்படும் பொழுது, மேல்வயிற்றிற்குச் செல்லும் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இந்த நரம்புகள் தூண்டுதல், மனச்சோர்வு, உடல் சோர்வு ஆகியவற்றை அதிகரிப்பதுடன், எரிச்சல், கோபம், ஆத்திரம் போன்றவற்றையும் ஏற்படுத்தும். சில நேரங்களில் தலைவலி, குமட்டல் போன்றவையும் ஏற்படும். வயிறுபுரட்டல், மேல் வயிற்று வலி போன்றவையும் கூட சிலருக்கு உண்டாகும். இந்த நரம்புத் தூண்டுதலால் வயிறு சுருங்கி விரியும். இதனால் வயிற்றுப் பகுதி மட்டுமல்லாது, வயிற்று குடல் இணைப்புப் பகுதியும் சுருங்கி விரியும். இதை ‘பசி சுருங்கல்’ என்று அழைப்பர். இது நிகழும் போழுது பசி உணர்வு மேலும் அதிகப்படும்.

சற்று நேரத்தில் தானாகவே இந்த சுருங்கல்கள் அடங்கிவிடும். கான்சர் போன்ற நோய்களில் இந்த சுருங்கல்கள் முழுமையாக நிகழாது. இதனால் பசி உண்டாகாது. சிலவகை நோய்களில் ‘பசியின்மை’ ஏற்படுவது மட்டுமன்றி உணவின் மீது வெறுப்பும் கூட உண்டாகும். இவ்வகை நோயாளிகள் உணவு எடுத்துக்கொள்ள மிகவும் தொல்லைப்படுவர். ஆக பசியுணர்வு நம் உடலின் ஓர் அவசியத் தேவையெனில் மிகையாகாது.

உண்ணும் விருப்பம்: பசி உணர்வு ஒரு தொல்லையான உணர்வெனில் உண்ணும் விருப்பம் ஒரு மகிழ்ச்சியான உணர்வாகும். பசி உணர்வு வயிற்றில் ஏற்படும் என்றால் உண்ணும் விருப்ப உணர்வு வாயிலும், அன்னத்திலும் தூண்டப்படும் ஓர் உணர்வாகும். சில நேரங்களில் இந்த விருப்ப உணர்வு பசியை தூண்டும் ஓர் உணர்வாகவும் இருக்கும். “அந்த உணவை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது” என்பது நாம் அடிக்கடி நினைக்கும், கேட்கும் ஒரு வாக்கியமாகும். சில நேரங்களில் உணவு சமைக்கும் பொழுது உண்டாகும் மணம் கூட உணவு விருப்ப உணர்வை தூண்டக் கூடியதாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் உணர்வு உட்கொள்பவர்களுக்கு, குறிப்பிட்ட அந்த நேரத்தில் உணவு விருப்ப உணர்வையும், பசி உணர்வையும் தானாக வாயும், வயிறும் உண்டாக்கி விடுவதையும் நாமறிவோம்.

உணவுப் பழக்கங்கள்:

உணவுப் பழக்கங்களை பொருத்தளவில், இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். சிலர் சைவ உணவுப் பிரியர்கள். சிலர் அசைவ உணவுப் பிரியர்கள். அதிலும் கூட சிலருக்குக் கீரைபிடிக்கும், சிலருக்கு காய்கள் பிடிக்கும். சிலருக்கு ஆட்டிறைச்சி பிடிக்கும், சிலருக்குக் கோழி இறைச்சி பிடிக்கும். தனிப்பட்ட உணவு விருப்பங்களுக்கு ஏற்ப, வயிறும் அவ்வகை உணவுகளுக்குப் பழகிவிடும். சமீபத்தில் தொலைக் காட்சிகளில் ஒரு காட்சி பார்த்திருப்பீர்கள். சென்னை பொது மருத்துவமனையில் ஒரு நோயாளியின் வயிற்றிலிருந்து ஏராளமான ஆணிகள், கத்தரி, இரும்புச் சாமான்களை எடுத்ததாக மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். உணவுப் பழக்கம் என்பது நாம் எந்த உணவுகளை வயிற்றிற்குக் கொடுத்துப் பழகுகிறோமோ, அதைப் பொருத்தே வயிற்றின் தாங்கும், செரிக்கும் சக்தியும் உண்டாகும்.

“ஒருவேளை உணவை ஒழியென்றால் ஒழியாய்,
இருவேளை உணவை ஏளென்றால் ஏளாய்,
இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது”

புகைப்பதை நிறுத்த உதவும் ஏலக்காய்

ஏலக்காய் மணத்திற்கு மட்டுமல்ல மருந்துக்கும் உதவுகிறது. சிகரெட் எரியும்போது கசியும் "நிக்கோட்டின்" நஞ்சு தொண்டை, ஈறு, நாக்குகளில் படியும்போது கறை உண்டாவதுடன், அங்கிருக்கும் பூந்தசைகளை அரித்துப் புண்களை உண்டாக்கும். "ஏலக்காய்" இந்தப் புண்களை ஆற்றுவிப்பதுடன், நிக்கோட்டின் கறைகளையும் படியாமல் அப்புறப்படுத்துகிறது.

இன்னொரு அரிய பயனும் உள்ளது. சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம், ஒரு ஏலக்காயினை வாயிலிட்டுச் சுவைக்க, புகைக்கும் எண்ணம் விலகும். இதனைப் பல அன்பர்கள் பின்பற்றி சிலர் புகைப்பதையே விட்டுவிட்டனர்.

கால(ன்)ம் வெட்டிய காமக்குழி!

“மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்கு மென்று.
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று”!

என்று கவியரசர் கண்ணதாசன் பாடல் கூறும்.

அப்படிப்பட்ட பாவப்பட்ட தம்பதிகள் எனக்குப் பழக்கமாயினர். அவர்களைப் பரிசோதித்தபோது இவர்களா இப்படி அல்லது இவர்களுக்குமா இப்படி என்று என்னால் துக்கப்படாமல் இருக்க முடியவில்லை.

அவர் ஒரு பொறியாளர். அமெரிக்காவில் சென்று செட்டிலாகி வாழ்பவர். அவர் பொறியாளர் மட்டுமல்ல நல்ல நெறியாளரும் கூட. வாழ்வதெல்லாம் வள்ளலார் போல் தான் தேடிய செல்வங்களில் பெரும்பங்கை வாழ்வில் ரணப்பட்டவர்கள் நல் வாழ்விற்காக வழங்குபவர். வள்ளலார்போல் திருமணமே வேண்டாமென்று வெறுத்த அவரை அப்படியே விட்டிருக்கலாம். மாறாகத் திருமணம் என்ற பந்தத்திற்குள் தன் தாயாரால் தள்ளப்பட்டார்.

அன்பு மகன், ஆசை மகன், செல்வமகன் அதுவும் சீமானாய் இருப்பவனை சிவனே என்று எந்தத் தாய் இருக்க விடுவார்? மருமகளைப் பார்க்க வேண்டும். மனதார ரசிக்க வேண்டும். பேரன் பார்க்க வேண்டும், பேர்த்தி சொல்கேட்கவேண்டும் என்று இவரை அசத்திவிட்டார்.

பொறியாளர் தன் நெறிகளில் ஒன்றை மீறி மண வாழ்க்கைக்கு சம்மதித்தார். தாய்க்கு ஆனந்தம் தாங்கவில்லை. தமிழ்ப் பண்பாடுடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர் மணமகளாய் வந்தார். இல்லறத்தில் எந்தச் சிக்கலும் இல்லை. “இன்பமே அன்றித் துன்பம் இல்லை” என்றுதான் வாழ்க்கைசுகமாக ஓடியது. ஒரே ஒரு குறை. தங்களுக்கென்று வாரிசு உருவாகவில்லை என்பது தான் அவர்களை உறுத்தியது. ஆவர்களை விட அவரின் தாய்க்குத்தான் மிகப்பெரும் கவலை. அந்தக் கவலையில் கண் மூடிவிட்டார்.

பொறியாளர் தம்பதிகள் இருவரும்

“நானொரு குழந்தை நீயொரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாளொரு மேனி பொழுதொருவண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி” என்று வாலியின் கவிதையாய் வாழ்ந்து வந்தனர்.

குழந்தை இல்லாக் குறை என்பது தசரதனையே வருத்தியுள்ள போது சாமான்யர்களை வருத்தாதா? இவர்களின் மனதுக்குள்ளும் அது உறுத்தலாகத்தான் இருந்தது. அவர்கள் தமிழகம் வந்தால் என்னைச் சந்திக்காமல் போவதில்லை. அத்தோடு உடற்பரிசோதனை செய்யவும் தவறுதில்லை. இந்த முறையும் அப்படி வந்த போதுதான் அந்த அதிர்ச்சி எனக்குள் காத்திருந்தது. அவர் அமெரிக்காவிலிருந்து வரும் போதெல்லாம் எனக்கென்று ஏதாவது பரிசுப்பொருள் வாங்கி வருவார். இந்த முறை அவர் பரிசுப் பொருளோடு தன் உடலுக்குள் ஹெச்.ஐ.வி. தொற்றையும் வாங்கி வந்திருந்தார்

ஒரு மருத்துவரான என்னால் இதனை சீரணிக்க முடியவில்லை. காரணம் ஒரு நெறியின் படி வாழ்ந்தவர். தவறி இருக்க வாய்ப்பில்லை. தவறி இருக்காமல் ஹெச்.ஐ.வி தொற்றவும் வாய்ப்பில்லை. என்ன டாக்டர் ரிப்போர்ட்டெல்லாம் எப்படி என்றார். நான் சொல்ல முடியாமல் சொன்னேன். எங்கே எப்படி என்றேன். அவரும் யோசித்து யோசித்து தேடித் தேடி ஞாபகப்படுத்தி சொன்னார்.

திருமணம் என்பது புனிதமானது என்பது தெரியும். அதேசமயத்தில் வருபவளை திருப்தியாக வைத்துக்கொள்ளவும் வேண்டும் என்பது தெரியும். ஒரு வற்புறுத்தலுக்காக கட்டிக்கொண்ட வள்ளலார் தன் மனைவியைத் தீண்டவே இல்லை, அந்த வைராக்கியம் அவரைப் பின்பற்றிய எனக்கு இல்லாமல் போனது. தன் மனைவி தன்னைப் பற்றிய உண்மை நிலையை அவர் உணரும் வண்ணம் அந்த மகான் எடுத்துரைத்து உலகின் ஒளியாகத் திகழ்ந்தார்

அடியேன் திருமணம் மறுத்துத் தான் இருந்தேன். தாயின் நிர்ப்பந்தத்தால் மண வாழ்வின் ஒப்பந்தம் போட்டேன். ஒப்பந்தத்தில் உடன்படுபவள் எந்த விதத்திலும் உணர்ச்சிக்காக ஏங்கக் கூடாது என்ற உந்துலால் என் உணர்வுகளை அதற்கு ஏற்ற ஆண்மையினை தெரிந்துகொள்ள ஒரு குளத்தில் குளிக்கும் கட்டாயம் ஏற்பட்டது.

நல்ல குளம் என்று நினைத்துதான் மூழ்கினேன். இப்போது வாழ்க்கையே மூழ்கிவிட்டது. நான் எனக்கும் துரோகம் செய்துள்ளேன். என் மனசாட்சிக்கும் துரோகம் செய்துள்ளேன். என் குருநாதரின் கொள்கைக்கும் துரோகம் செய்துள்ளேன். கூட வந்துள்ள மனைவிக்கும் துரோகம் செயதுள்ளேன். இதனால் இயற்கை எனக்கு துரோகம் இழைத்துவிட்டது என்று கண்ணீர் சிந்தினார்.

பயப்படாதீர்கள், இப்போது தான் தொற்றி இருக்கிறது. ஒழுங்காக மருந்து எடுத்துகொண்டால் வாழ்க்கையை ஓரளவு வாழலாம். பயம் மட்டும் வேண்டாம். இன்னும் பத்தாண்டுகளுக்கு உங்களுக்கு உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு தயங்கித் தயங்கி இன்னொன்றும் சொன்னேன். சொல்லுங்கள் டாக்டர் என்றார். இது போன்ற நேரங்களில் மனைவியையும் பரிசோதிப்பது தான் உகந்தது என்றேன்.

மறுத்தும் மறுக்காமல் மனதில்லாமல் அன்று மறு நாள் மனைவியை அழைத்துவந்தார். பரிசோதனையில் அவருக்கும் இவர் தந்த பரிசு ஒட்டியிருந்தது. என்ன செய்ய விதியே என்று அழுதனர். சங்க இலக்கியத்தில் வரும் பெண்மானும் பிணைமானும்போல் வாழ்ந்த இல்லறத்தில் இப்படிக் கீறல் விழுந்துவிட்டது. இருவருமே பொறியாளர்கள், படித்தவர்கள் வருகிறோம் என்று சொல்லிவிட்டுப் போனார்கள். நான் வரமாட்டார்களோ என்று தான் இருந்தேன். ஆனால் நான் எதிர்பாராத வண்ணம் அவர்கள் இருவரும் திடீரென்று வந்தார்கள்.

சோதித்ததிலும் மகிழ்ச்சியோடு காணப்பட்டவர்கள், வாருங்கள் வைத்தியம் செய்து கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அது பற்றிய செய்திகளைச் சொல்லத் துவங்கும் முன் வைத்தியம் இருக்கட்டும் டாக்டர். நாங்கள் ஒரு கொள்கை முடிவோடு வந்திருக்கிறோம். அதனைப் பேசிவிட்டு வைத்தியம் பற்றி அடுத்துப் பேசுவோம் என்றனர்.

சொல்லுங்கள் என்றேன். டாக்டர் எங்களுக்குப் பிள்ளை இல்லை. ஆனால் பத்துத் தலைமுறைக்கு மேல் சொத்து அமெரிக்காவிலும் இருக்கிறது. பிள்ளை இல்லையே என்ற குறையோடு நாங்கள் சாகவிரும்பவில்லை. எங்களின் வாரிசாக ஒரு குழந்தையைத் தத்தெடுத்து அதன்பேரில் எழுதி வைக்க விரும்புகிறோம். அதும் ஏழைக் குழந்தையாக இருக்க வேண்டும். ஆனால் ஒரே விஷயம் என்னவென்றால் எங்கள் இருவருக்கும் ஹெச்.ஐ.வி. இருப்பதைச் சொல்லித்தான் கேட்போம். தத்துக்கொடுப்பவர்களிடம் பொய்சொல்லிக் கேட்கமாட்டோம் என்றனர்.

எனக்கு இது மிரட்சியாகவும் புரட்சியாகவும் தெரிந்தது. தங்களின் நோய் பற்றி பட்டவர்த்தனத்தனமாக, பகிரங்கமாகப் பறைசாற்றிதான் தத்துக் கேட்போம் என்ற அவர்களின் பிடிவாதமும், புரட்சியாகத் தெரிந்தது. அதே சமயத்தில் இப்படிப்பட்ட ஹெச்.ஐ.வி. தாக்கிய தம்பதிகளுக்கு எவர் பிள்ளைகளைத் தத்துக்கொடுக்க வருவர் என்ற மிரட்சியும் இருந்தது.

அவர்களோ டாக்டர் இது தான் எங்கள் முடிவு யோசனை சொல்லுங்கள் என்றனர். தீர்ப்பு இன்னதுதான் என்று தெரிந்த பிறகு முடிவு பற்றிக் கருத்து கூறுவது முட்டாள் தனம் என்பது எனக்குத் தெரியாதா? இருந்தாலும் இது பற்றி விழிப்புணர்வு இயக்கங்கள் தொண்டு நிறுவனங்களிடம் கேட்டுப் பாருங்கள். சாமான்யர்கள் அஞ்சுவார்கள் என்று மட்டும் கூறி உங்கள் முயற்சி வெல்க என்று வாழ்த்தினேன்.

அதன்பின் போனவர்கள்தான். இருக்கின்றார்களோ இல்லையோ, தத்து எடுத்தார்களோ இல்லையோ செய்தி ஏதும் இல்லை. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் ஒழுக்கமானவர்கள் அல்லது உன்னதமானவர்களும் ஒரு சபலத்தில் உலகை விட்டே போகிறார்கள் என்று எண்ணும்போது இது விதியா இயற்கையின் சதியா என்று புரியவில்லை.

காலம் வெட்டிய காமக் குழிகளில் இவர்கள் போன்று இன்னும் எத்தனை யானைகள் விழுந்தனவோ.. விழுமோ..!

பற்களை பாதுகாக்க சில யோசனைகள்

சரிவிகித சத்துணவை சாப்பிட வேண்டும்.

சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கலந்த உணவை உண்ணும் ஒவ்வொரு முறையும் இருபது நிமிடங்களுக்குப் பிறகு அமிலங்கள் உற்பத்தியாகி பற்களை தாக்குகின்றன. எனவே தினந்தோறும் உண்ணும் நொறுக்குத்தீனீயின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

பழங்கள், பச்சைக்காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் உணவையும் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் உண்ணலாம். சாப்பிட்டு முடித்தவுடன் பற்களை சுத்தம் செய்துவிடுங்கள். இது பற்கள் பாதுகாப்புக்கு மிக அவசியம்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களை உண்பது நல்லது. இதனால் பற்கள் சுத்தமாவதுடன் ஈறுகளுக்கும் இதமாக இருக்கும்.

உணவு வேளையில் நீங்கள் உண்ணவேண்டிய கடைசிப்பொருள் நறுக்கப்பட்ட பச்சைக்காய்கறிகளாகவோ அல்லது பழங்களாகவோ இருக்கட்டும். மறந்தும்கூட இனிப்பு பொருட்களை சாப்பிட வேண்டாம்.

காலையில் மட்டும் பல்துலக்கினால் போதாது. காலை, மாலை இரண்டு வெளையும் பல் துலக்க வேண்டும்.

ஆண்மையைப் பாதிக்கும் சிகரெட்

ஒரு பெண்ணைத் தாயாக்க வேண்டுமானால் ஆணுக்கு கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்:

1. உடலுறவின்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைந்தது 2 மில்லி லிட்டர் இருக்க வேண்டும்.

2. விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியன் இருக்க வேண்டும்.

3. 70 சதவீதத்திற்கு மேலான உயிரணுக்கள் உயிர்த்தன்மையுடன் இருக்க வேண்டும்.

4. 30 சதவீதத்திற்கு மேலான அணுக்கள் உருச்சிதைவில்லாமல் இருக்க வேண்டும்.

5. விரைவாக ஊர்ந்து செல்லும் அணுக்களின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்கு மேலாக இருக்க வேண்டும்.

இப்படி இருந்தால் மட்டுமே அப்பாவாதற்கு அவர் முழுத்தகுதி உடையவர் ஆவார்.

புரதச் சத்து, வைட்டமின் ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் குறைவான உணவுகளை உண்டு வரும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல் சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கும் ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின், உயிரணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, விந்தணுக்கள் ஊர்ந்து செல்லும் தன்மையையும் பாதிக்கிறது. எனவே அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது.

உடல் நலம் பேணும் கலவி!!

கலவி உடலை உறுதியாக்கி, இதய நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைத்து உடலை இளமையாக வைத்திருக்கிறது என்று சிலிர்ப்பூட்டும் அறிக்கை வெளியிட்டு தம்பதியரை உற்சாகமூட்டியிருக்கிறது.

கலவியினால் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட கலவி குறைக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கலவியின் உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் செரிமானத்துக்கும், உடலிலுள்ள சுருக்கங்களை விலக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது என்றும் அதிக கலோரிகளை கலவி கரைக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில மருத்துவர்கள் இதை மறுக்கின்றனர். அறிவியல் பூர்வமாக இவை நிரூபிக்கப்படவில்லை என்ற அவர்களுடைய மறுப்புகளையெல்லாம் NHS நிராகரித்துவிட்டது. இவை நீரூபிக்கப்பட்ட உண்மைகளே என தனது தரப்பு வாதத்தை அது முன்வைக்கிறது.

இது மட்டுமன்றி கலவியினால் உடலில் ஜலதோஷம், உடல்வலி போன்ற சிறு சிறு பலவீனங்கள் வரும் வாய்ப்பும் குறைகிறதாம். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் கூட கலவி வலுவூட்டுகிறதாம்.

நமது பழங்கால பஞ்சாங்கங்கள் சொல்வதற்கு நேர் மாறாக இந்த அறிக்கை இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

எப்படியோ, உற்சாகமான உடற்பயிற்சிகளும் உலகில் இருக்கின்றன என்பதை சொல்லும் இந்த அறிக்கையை கலவியர்கள் மன்னிக்கவும் காதலர்கள் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

வயாகராவை மிஞ்சும் புதிய பாலியல் மருந்து !

வயாகரா மாத்திரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உலகெங்கும் சுமார் மூன்று கோடிபேருக்கும் அதிகமாக அந்த மாத்திரையைப் பயன்படுத்தியுள்ளனர் என புள்ளி விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கிறது அடுத்த அசத்தல் கண்டுபிடிப்பு.

லிபிடோ இன்செக்ஷன் எனும் இந்த புதிய மருந்து வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம்.

பாலியல் ஆர்வமின்மை இன்றைய அவசர யுகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் இந்த ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம் இது என்கின்றனர் இந்த புதிய அதிசய மருந்து தயாரிப்பாளர்கள்.

இந்த மருந்து Type 2 gonadotropinb ஐ வெளிவிடும் ஹார்மோன்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் பாலியல் ஆர்வத்தை தூண்டுகிறதாம்.

வயாகரா வெறுமனே உடலில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் நின்று விடுகிறது. மன அளவில் அது எந்த விதமான ஆர்வத்தையோ, விருப்பத்தையோ, மோகத்தையோ கிளறிவிடுவதில்லை. கூடவே அது முழுக்க முழுக்க ஆண்களுக்கானது. ஆர்வமற்ற பெண்களுக்கு வயாகராவினால் எந்த பயனும் இல்லை. ஆனால் இந்த புதிய ஆர்வம் தூண்டும் மாத்திரை பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலமும், அதற்குரிய சுரப்பிகளை சுரக்கச் செய்வதன் மூலமும் ஆண்மைக் குறைபாடு உட்பட பல நோய்களையும் இந்த மருந்து சரி செய்து விடும் என்கின்றனர்.

முதலில் பெண்களுக்கென தயாரிக்கப்பட்ட இந்த மருந்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயன்படுத்தப்படும் வகையில் இப்போது உருவாகி வருகிறது.

மூளையில் நேரடியாக ஊசி மூலம் செலுத்த வேண்டும் என துவங்கிய ஆராய்ச்சி இப்போது இரத்தக் குழாய்களிலும் செலுத்தலாம் எனும் அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. இதை மாத்திரை வடிவத்துக்குள் அடைக்கும் முயற்சி இப்போது நடைபெற்று வருகிறது.

வயாகராவை முழுமையாக துடைத்து எறியும் நோக்குடன் இந்த மருந்து மன உடல் சார்ந்த பிரச்சனைகளின் தீர்வாக தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இதன் பக்க விளைவு ஒரு பக்கா விளைவாம். அதாவது உடல் எடை கணிசமாகக் குறையுமாம்.

அட !! ஒரு க(பி)ல்லிலே இரண்டு மாங்கா !

கொழுப்புச்சத்தை குறைக்கும் குண்டு உடலை மெலிய வைக்கும் முட்டை

கொழுப்புச்சத்து காரண மாக உடல் குண்டான வர் கள் பெரும் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். எவ்வளவோ மருந்து மாத்திரைகளை உட் கொண்டு வந்தாலும் போதிய பலன் இல்லை.

இதனால் குண்டானவர் கள் உடல் இளைக்க உடற் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு உபாயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக இங்கிலாந்து இருதய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒரு தகவலை தெரிவித்து உள்ளது.

அதாவது தினசரி முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் மெலியுமாம்.

தினமும் காலை டிபனுக்கு பதில் 2 முட்டை மட்டும் சாப்பிட்டு வர வேண்டும். தொடர்ந்து 12 வாரம் இது போன்று சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து குறைந்து உடல் மெலியும். அழகான தோற்றம் பெறலாம் என்று அந்த மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்

நவீன வாழ்க்கைச் சூழலில் மிகப்பெரும் சவாலாய், பூதாகரமான பிரச்சனையாய் எழுந்துள்ளது ‘உடல் பருமன்’. இது எந்த வயதிலும் எவருக்கும் வரலாம். பருவமடைந்த பின் ஆண்களை விடப் பெண்களிடம் பரவலாக அதிகளவு உடல் பருமன் ஏற்படுகிறது. குறிப்பாக திருமணத்திற்குப் பின் அல்லது கர்ப்பத்திற்குபின் அல்லது மாத சுழற்சி முற்றுப்பெற்றபின் உடல் பருமன் உண்டாகிறது.

மனிதரைத் தவிர பிற உயிரினங்களில்.... எலி, பூனை, நாய், ஆடு, மாடு, செடி, கொடி, மரம்... அனைத்திலும் அவற்றின் இயற்கையான உடல் அமைப்பு மற்றும் எடையைக் கடந்து மிதமிஞ்சி உடல் கொழுத்து நடக்க இயலாமல், மூச்சுவிட இயலாமல் அவதிப்படுவதைப் பார்க்கமுடியாது. மனிதர்கள் மட்டுமே தம் அளவுக்கு மீறி யானைகள் போல, மாமிசக் குன்றுகள் போல மாறுகின்றனர்.

அதிக எடையும் உடல் பருமனும்

‘அதிக எடை’ என்பதை எல்லா சந்தர்ப்பங்களிலும் ‘அதிக பருமன்’ என்று கூற முடியாது. உடற்பயிற்சியாளர்கள், விளையாட்டு வீஜ்ர்கள் சராசரி எடையைவிடச் சற்று அதிகமாக இருப்பார்கள். ஆனாலும் அவர்களிடம் அதிகக் கொழுப்புச்சத்தி இருப்பதில்லை. அது சதை வளர்ச்சி. கொழுப்பின் அளவும் அதிகரித்து, உடலின் சராசரி எடையும் அதிகமிருந்தால் அது உடல் பருமனின்றி வேறில்லை.

மனித எடையை தோராயமாகக் கணக்கிடும் முறை

ஒருவரின் உயரம் சென்டிமீட்டர் கணக்கில் எவ்வளவோ அதில் 100ஐக் கழிக்க வேண்டும். பின் அதிலிருந்து 90 சதவீத அளவை அறியவேண்டும். ஒருவர் 170 சென்டி மீட்டர் உயரமிருந்தால் 100ஐக் கழிக்கும்போது 70 வருகிறது. அதில் 90 சதவீதம் கணக்கிட்டால் 63 வருகிறது. 170 செ.மீ. உயரமுள்ளவருக்கு 63 கிலோ எடைதான் ஏறத்தாழ சரியான எடையாக இருக்கும். இந்த எடையில் பத்து சதவீதம் அதிகரித்தால் கூட ‘உடல் பருமன்’ என்று கூற முடியாது. மாறாக, அதற்கும் மேல் தொடர்ந்து எடை அதிகரிக்குமானால் உடல் பருமன் ஏற்பட்டே தீரும்.

சராசரி எடையில் 10 முதல் 15 சதம் அதிகரித்தால் அதனைச் சிறிதளவு பருமன் எனக் கருதலாம்.. 15 முதல் 20 சதம் அதிகரித்தால் நடுத்தர பருமன் எனக் கருதலாம். 20 சதவீதத்திற்கும் மேல் எடை அதிகரித்தால் அதிக பருமன் என அறியலாம்.

சிறிதளவு பருமனாக இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க உடல் தொந்தரவுகள் இல்லாமலிருக்கலாம். இருப்பினும் தோற்றம் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்ற அழகுக் கோணத்திலிருந்து பார்ப்பவர்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர்.

நடுத்தர பருமனாளிகளும் அதிக எடையுள்ள குண்டர்களும் உடல் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதாலும், எடையைச் சுமக்க முடியாமலும், மூச்சு வாங்குவதாலும், இதர கடும் நோய்களாலும் அவதிக்கு ஆளாகின்றனர்.

உடல் பருமனுக்கு காரணங்கள் என்ன?

உடலில் அன்றாட இயக்கங்களுக்கு வேண்டிய சக்தியளிப்பதற்குத் தேவையான அளவைவிட அதிகளவு உணவு உண்பதால் தேவைக்கு அதிகமான கலோரிகள் கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது. தேவையைவிட ஒருவர் தினம் 50 கலோரி அதிகம் எடுத்தால் ஒரே ஆண்டுக்குள் 2 கிலோ எடை அதிகரித்துவிடும்.

கலோரி என்பது ஒன்றரை லிட்டர் நீரை 15 டிகிரி செண்டிகிரேடிலிருந்து 160 டிகிரி வரைச் சூடாக்கத் தேவையான உஷ்ணசக்தி. இக்கலோரியை (எரிசக்தியை) உணவுகள், காய்கறிகள், பழங்கள் மூலம் நாம் பெறுகிறோம். வெவ்வேறு உணவுப் பொருட்களில் வெவ்வேறு அளவு கலோரிகள் கிடைக்கின்றன.

வசதியாக, உட்கார்ந்தே பணிபுரியும் சொகுசுப் பேர்வழிகளுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஒரு கிலோவிற்கு 20 கலோரிகள் தேவைப்படலாம். ஓரளவு உடலுழைப்பு உள்ளவர்களுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஒரு கிலோவிற்கு 25 கலோரிகள் தேவைப்படலாம். அதிகம் உடற்பயிற்சி, உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு அவர்களது எடையில் ஒரு கிலோவிற்கு 30 கலோரிகள் தேவைப்படலாம்.

மேலும் உண்ணும் உணவின் அளவைவிட தரத்தையும் கலோரிகளையும் கொள்ளவேண்டும். 100 கிராம் வெள்ளரியில் 16 கலோரி சத்தும் 100 கிராம் வறுத்த நிலக்கடலையில் 600 கலோரி சத்தும், 1 கிராம் புரதத்தில் 4 கலோரி சத்தும், 1 கிராம் கார்போஹைட்ரேட்டில் 4 கலோரி சத்தும், 1 கிராம் கொழுப்பில் 9 கலோரி சத்தும், 1 சப்பாத்தியில் 100 கலோரிகளும், 1 பிஸ்கட்டில் 40 கலோரிகளும், 75 கிராம் சாதத்தில் 100 கலோரிகளும், 1 அவுன்ஸ் ஆட்டுக்கறியில் 500 கலோரிகளும், 1 அவுன்ஸ் மீனில் 360 கலோரிகளும் கிடைக்கின்றன. வயது வந்த ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 1400 முதல் 1900 வரை கலோரிகள் தேவைப்படக்கூடும். இதில் குறைவு ஏற்பட்டாலும், அதிகம் ஏற்பட்டாலும் உடலின் அமைப்பு, செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

ஒழுங்கற்ற உணவுப் பழக்கமும், அதிகக் கொழுப்பு உணவுகள் உண்பதும் குறிப்பாக எண்ணெய் பண்டங்கள், பால் பொருட்கள், அசைவ உணவுகள், சாக்லேட் இனிப்புகள், ஐஸ்கிரீம், மது, நெய், வெண்ணெய், முட்டை மஞ்சள் கரு போன்றவைகளால் உடல் எடை அதிகரிக்கிறது. வாயுப் பண்டங்களாலும் (பருப்பு, உருளைகிழங்கு) எடை கூடுகிறது. இருவேளை உணவுகளுக்கு இடையில் நொறுக்குத்தீனிகள் மெல்லும் பழக்கமும், டிவி பார்த்தபடி அல்லது வேறு வேலையின்போது நொறுக்குத்தீனிகள் தின்னும் பழக்கமும் உடல்எடையை அதிகரிக்கச் செய்கின்றன.

உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ இல்லாததால், பகலில் அதிகளவு சாப்பிட்டுவிட்டு அதிகம் நேரம் தூங்குவதால், பொதுவாக அதிக ஓய்வும் உறக்கமும் கொள்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது. சில குடும்பங்களில் பாரம்பரிய தன்மை காரணமாக பருமனான பெற்றோருக்கு பருமனான குழந்தைகள் பிறக்கின்றனர்.

ஹார்மோன் இயக்கக் கோளாறுகளாலும், அடிக்கடி பிரசவங்கள், கருச்சிதைவுகள், அறுவைச் சிகிச்சைகளைத் தொடர்ந்தும், NSAID போன்ற சில ஆங்கில மருந்துகள், உடலில் நீர் திரவத் தேக்கங்கள் உண்டாக்கும் ஸ்டீராய்டுகள், கருத்தடை மாத்திரைகள் போன்ற காரணங்களாலும் உடல் பருமன் ஏற்படுகின்றது. மேலும், இவை உடல் பருமனை உண்டாக்குவதில் முக்கியக் குற்றவாளிகளாகவும் உள்ளன.

உடல் பருமனால் பல பிரச்சனைகள் :

உடல் பருமனால் ஒரு மனிதனுக்கு உடல்ரீதியாக மட்டுமின்றி உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். அதிக பருமனால் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய பல நோய்கள் தாக்குகின்றன. மாரடைப்பு, உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை, இடுப்பு எலும்புகள், முதுகுத்தண்டு, முழங்கால் மூட்டுகள் தேய்மானம், குடலிறக்கம், அசுத்த ரத்த நாளப் புடைப்பு... போன்ற பல மோசமான நோய்கள் முற்றுகையிடுகின்றன.

மந்த இயக்கம், சோர்வு, பலவீனம் காரணமாக அடிக்கடி கீழே விழ நேரிடலாம் அல்லது விபத்து நேரிடலாம். வீட்டில், வயலில், தொழிற்சாலையில், இதரபணியிடங்களில் நிற்பது, நடப்பது, பணியாற்றுவதும், உடல் சுகாதாரம் பேணுவதும் மிகச்சிரமம். உடல் பருமன் ஒருவித நரம்பியல் நோயை ஏற்படுத்துகிறது. உளவியல் ரீதியாக மனச்சோர்வு, தன்னம்பிக்கை குறைவு, பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்சனைகள் பாதிக்கின்றன. தனது பருமன் தனக்கு மட்டுமின்றி குடும்பத் திற்கும், உலகத்திற்கும் சுமை எனும் உணர்வு ஏற்பட்டு விரக்தியும் மன அழுத்தமும் மேலோங்கும்.

என்ன செய்யவேண்டும்?

ஓரளவு மட்டுமே எடை அதிகமிருப்பவர்கள் அதிக மாவுப் பொருள், கொழுப்பு பொருள் உண்பதைக் குறைக்கவேண்டும். ஓரளவு உடற் பயிற்சி அல்லது யோகா மேற்கொள்ளவேண்டும்.

அதிக எடை எனில், உணவில் அதிகக் கட்டுப்பாடுகள் தேவை. உபவாசம், பழவகைள், வாரம் 1 நாள் திரவ உணவுகள் மட்டும் அருந்துதல் எனப் பழக்கப்படுத்தினால் பசியின் அளவு குறையும். குறைந்தது மாதம் 1 கிலோ எடையேனும் குறையும். கொழுப்பு மற்றும் மாவு உணவுகளுக்குப் பதிலாக கணிசமான அளவு பழங்கள் உண்ண வேண்டும். திறந்த வெளிக் காற்றில் அன்றாடம் உடற்பயிற்சி, யோகா, சுறுசுறுப்பான நடை போன்றவற்றை அவரவர் எடை, வயது, உடற்தகுதிக்கேற்ப எதுவாகவும் மேற்கொள்ளலாம்.

நிலையில் எடை குறையலாம். அடுத்தடுத்து பயன்படுத்தும்போது அவை பயனற்றவை என்று உறுதியாகும். அடிப்படையாக வாழ்க்கை முறையை, உணவு முறையை மாற்ற வேண்டும். உடல் பருமனைக் கட்டுப்படுத்த விரும்பு வோர் மும்முனைப் போருக்குத் தயாராக வேண்டும். 1. உணவுப் பழக்கங்களை ஒழுங்குப் படுத்தவேண்டும் 2. வாழ்க்கை நடைமுறைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் 3. பக்கவிளைவு இல்லாத உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஹோமியோபதி மருந்துகள் சிறப்பாக உதவுகின்றன.

உடல் பருமனுக்கு ஹோமியோபதி சிகிச்சை :

ஹோமியோபதியில் நோயாளியின் உடலமைப்பிற்கேற்ற மருந்து மிக முக்கியம். அதனுடன் பருமனைக் குறைக்க ஹோமியோ மேதைகள் சில மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.

‘Prescriber’ நூலில் Dr. ஒ.ஏ. கிளார்க் ‘Phytoberry’ தினம் 3 வேளை வீதம் 1 மாதம் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கிறார். பலனளிக்காவிட்டால் Ammonium Brom 3x, Cal.carb30, Cal.ars30 ஒன்றன் பின் ஒன்றாய் முயற்சிக்குமாறு கூறுகிறார்.

போயரிக் அவர்கள் ‘Fucus ves Q அல்லது 1 x மருந்தினை (5 முதல் 60 சொட்டுகள் வரை) உணவிற்கு முன் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார். அபானவாயு, அஜீரணம், பிடிவாதமான மலச்சிக்கல் குறிகளுடன் உள்ள உடல் பருமனுக்கு இம்மருந்து மிகவும் பொருந்தும் என்கிறார். போயரிக் சுட்டிக்காட்டும் பிற மருந்துகள் Am.brom, Antim crud, Capsicum, Graph, Thyroidene, Lodothyrene.

T.P. சாட்டர்ஜி அவர்கள் ‘Hight hights of Homeo Practice’ நூலில் J.H. கிளார்க் பரிந்துரை என்று கூறி Calotropis மருந்தினை 3 மாத காலம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். வயிறு பெருத்த ஆண்களுக்கு Nuxvomica 10m, வயிறு பெருத்த பெண்களுக்கு Nuxvmomica 200 மருந்தினை சாட்டர்ஜி பரிந்துரை செய்கிறார்.

பெண்ணிடம் ஈர்ப்பு...

ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படும். அப்படி என்னதான் இருக்கோ தெரியலை.. இப்படி அலையறானுக.. என்பார்கள். சரி. என்ன இருக்கு தெரியுமா?

பெண்களின் ரத்தத்தில் உள்ள வெள்ளைச் செல்களிடம் ஈர்ப்புத் தன்மை அதிகமாக இருப்பது தான் ஆண்களை கவர்ந்திழுக்கக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆண்களின் இரத்த சிவப்புச் செல்கள் உபரியாக இருக்கும்போது எண்ணம், உடல் யாவற்றையும் கவ்விக்கொள்ளும் தன்மை ஏற்படும்.

இதனால்தான் ஆண்கள் எதையும் தனித்து ரசிக்கிறார்கள், புசிக்கிறார்கள். ஆணின் சிவப்புச் செல்லின் தன்மைகள் பெண்ணின் வெள்ளைச் செல்லின் மென்மையான ஈர்ப்புத் தன்மையால் கவரப்படுகிறது. இதனால்தான் பெண்களிடம் ஆண்கள் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். முதுமையில் பாசமாக, அன்பாக மாறுகிறதே அதுகூட இந்த வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் ஈர்ப்புதானாம்.

டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்!

இன்று நாம் ஒரு அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வே இயந்திரமயமாகிப் போய்.. நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம்.

நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது. ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது.

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம். அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம். இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிகமாகும்போது மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது.

மனமும், உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய்விடுகிறது. மூளை சரியாக செயல்பட மறுக்கிறது. இப்படி உடலும், மனமும் ஸ்தம்பித்து போவதைத் தான் இறுக்கம் என்கிறோம். இந்த இறுக்கம் அதிகமாகி டென்ஷனாக உருவெடுக்கிறது.

டென்ஷன் அதிகமாகும்போது நம்மால் சிறிய வேலையைக் கூட சரியாக செய்யமுடிவதில்லை. மனதை ரிலாக்ஸ் செய்ய மாத்திரைகளை விழுங்குகிறோம். இந்த மாத்திரைகள் தற்காலிகமாக நரம்புகளை தளர்த்தி அமைதியை தருகின்றன. இப்படி தொடர்ச்சியாக நரம்புகளை மருந்து கொண்டு பலவந்தமாக தளர்த்துவதால் நாளடைவில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு பலவகையான வியாதிகளுக்கு ஆளாகி அவஸ்தைப்படுகிறோம்.

நாம் அமைதியாக டென்ஷன் ஆகாமல் இருக்கிற ஒவ்வொரு வினாடியும் நம் வாழ்நாளில் ஒரு விநாடியை கூட்டிக் கொண்டே இருக்கிறது.

நம் மனதை உள் மனம், வெளிமனம், புதை மனம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். வெளிமனதின் உறுதியோடுதான் நாம் நம் அன்றாட அலுவலர்களைச் செய்கிறோம். வெளிமனம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே உள்மனம் ஏற்றுக் கொள்கிறது. உள் மனம் சக்தி வாய்ந்தது - ஆனால் அதற்கு சிந்திக்கத் தெரியாது. வெளிமனம் தனக்கிடும் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படுகிறது.

உள் மனதை ஒரு கம்ப்யூட்டரோடு ஒப்பிடலாம். சரியாக இயக்கினால் கம்ப்யூட்டர் எதை சாதிக்காது? அப்படித்தான் நம் உள்மனமும். வீணையை சரியாக மீட்டினால் நாதம் வரும். தவறாக மீட்டினால் அபஸ்வரம் தானே வரும்.

கணணியின் காதலரா?

கணணியில் அதிக நேரம் வேலை செய்பவாரா நீங்கள்?

இதோ உங்கள் கண்களை பாதுகாத்து கொள்ள சில சுலபமான வழிகள்.

1. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, உங்கள் பார்வையை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை பாருங்கள். இப்படி செய்வத்ன் மூலம் கண்ணில் பார்வை அளவை மாற்ற முடியும்.[focus length]

2.கண்களை தொடர்ந்து 20 முறை அடியுங்கள். இப்படி செய்வதன் மூலம் ஈரத்தன்மையை கண்கள் அடைகிறது.

3. 20 அடிகள் நடவுங்கள். - இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

பப்பாளிப்பழம்

பழ வகைகள் எத்தனையோ இருந்தாலும் அவற்றுள் எல்லாம் சிறந்தது பப்பாளிப்பழம் தான் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

இது உடல் ஆரோக்கியத்தை மீட்டு புத்துயிர் அளிப்பதால் இத்தகைய சிறப்புப் பெற்றுள்ளது. பொதுவாக மாம்பழத்தில் அதிக வைட்டமின்கள் உண்டு. இதற்கு அடுத்தபடியாக பப்பாளிப்பழத்தில் தான் அதிக வைட்டமின்கள் உள்ளன.

அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ- தான் அதிக அளவில் இருக்கிறது. எனவே தான் இதை நைட்ப்ளைண்ட்னஸ் எனப்படும் மாலைக்கண் நோய்க்கு அருமருந்தாகப் பயன்படுத்தலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

ஒரு அவுன்ஸ் பப்பாளி சுமார் 513 மில்லி கிராம் வைட்டமின் ஏ-வைக் கொண்டுள்ளது. அதே போல பி1, 11 மில்லி கிராமும், பி2, 2.72 மில்லி கிராமும், சி, 13 மில்லி கிராமும், இரும்புச்சத்து 0.1 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 0.3 மில்லிகிராமும் அடங்கி உள்ளன.

இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், வசதி படைத்தவர்களால் மட்டுமே பெரும்பாலும் உண்ணப்படும் ஆப்பிள் பழத்தை விட இதில் உயிர்ச்சத்துக்கள் அதிக அளவில் அடங்கி உள்ளன.

பப்பாளி ரத்த உற்பத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதால் பெரும்பாலான நோய்கள் வரும் முன்னரே தடுக்கப்படுகின்றன.

மலச்சிக்கலைத் தடுக்கவும், பெண்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், பல் தொடர்பான நோய்களைப் போக்கவும் இது பயன்படுகிறது. நரம்பு மண்டலத்துக்கு உரமேற்றும் தன்மை இதற்கு உண்டு என்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்

தக்காளி

நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.

தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக் போன்றது.

இதில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின் பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன.


இவை தவிர, நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது.

தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும்.

குறிப்பாக இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு.

தக்காளியை சாப்பிடும் முன்பு சத்தம் செய்ய மறக்காதீர்கள்.

எனவே அன்றாடம் நமது உணவில் தக்காளியை மறக்காமல் சேர்த்து வந்து அதன் நன்மைகள் அனைத்தையும் பெற்று ஆரோக்கியமாக வாழ்வோம்.

குண்டாக வருவதற்கு சில உணவு டிப்ஸ்...

ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்....

தினசரி நீங்கள் சாப்பிடும் உண வில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் மையலில் பயன்படுத்துங்கள்.

சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம் பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும். கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரி யுள்ளவற்றை சாப்பிடவும்.
சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடிப்பது, அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.

நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும். படுக்கச் செல்வ தற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம் எடையைக் கூட்டும்.
நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால் சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம்.

உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்காதீர்கள்.

குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான ஷேப்பில் இருக்க உதவும். ஆனால் அளவுக் கதிகமாக, அதாவது உடல்களைப் படைகிற வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். காலையிலும், மாலையிலும் ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, போரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்க மாக்கிக் கொள்ளுங்கள். பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது.

நெஞ்சு எரிச்சல் ஏன்?

வயிற்றில் செரிமானத்திற்கு பயன்படும் அமிலங்கள், வயிற்றையும் வாயையும் இணைக்கும் ஈஸோபாகஸ் எனும் பகுதியில் புகும் போது ஒரு புளிப்பு தன்மையோடு, எரிச்சல் ஏற்படுகிறது. புண்களும் ஏற்படலாம். பொதுவாக, இந்த பகுதிக்கும் வயிற்றிற்கும் இடையில் இருக்கும் ஸ்பிங்க்டர் என்ற குழாய் சரியாக வேலை செய்யாவிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. குடலிறக்கம் போன்ற சில காரணங்களாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம்.

கொழுப்பு, மதுபானங்கள், புகை பிடித்தல் இனிப்புகள், சாக்லெட் மற்றும் மிண்டுகள், இந்த பகுதியில் திசுவை வலுவிழக்க செய்து, வயிற்றிற்கும் ஈஸோபாகஸிற்கும் உள்ள திறப்பை குறைக்கிறது. இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அதிகமாக சாப்பிடுதல், வேக வேகமாக சாப்பிடுதல், ஒழுங்காக மெல்லாமல் விழுங்குதல், சரியாக சமைக்காத உணவுகளை உண்ணுதல் போன்றவற்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். பொதுவாக, நாம் சாப்பிடும் உணவுகளால் ஏற்படுவதை சாப்பாட்டிற்கு பின் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் அதிகமாக சுரப்பதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

இதனை தடுக்க நாம் சில வழிகளை கையாளலாம். முதலில், அதிகமாக இந்த பிரச்னைகளை உடையவர்கள் மூன்று வேளைகள் அதிகமாக உண்பதை விட, சிறு சிறு அளவில் அவ்வப்போது உணவை உட்கொள்ளலாம். காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ள அரிசி மற்றும் பிரட் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளலாம். ஆனால் அதிகமாக உண்ண கூடாது. காபி, டீ, பியர், வைன் போன்றவை அமிலம் சுரப்பதை துõண்டுவதால் இவற்றை அதிகம் குடிக்க கூடாது. துõங்கும்முன் பால் குடிப்பது அமிலச் சுரப்பை அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது.

வாசனை பொருட்கள் அதிகமுள்ள உணவு, வறுத்த உணவுகளை தவிர்க்கலாம். அழுத்தத்தை தவிர்த்து, வாழ்க்கை முறையை மாற்றுதல் நெஞ்சு எரிச்சலை குறைக்க உதவும். சாப்பிட்ட உடனே படுக்கைக்கு செல்ல கூடாது. அதிக எடையும் நெஞ்சு எரிச்சலை துõண்டுவதால், எடையை குறைக்கலாம்.

உணவிற்கிடையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பலன் தரும். வாழைப்பழத்தில் சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோசுடன் நார் சத்தும் உள்ளதால் நன்மையை தருகிறது. அதிகமாக சாப்பிட்ட பிறகு உங்கள் வாயில் புளிப்பு தன்மை ஏற்பட்டால் அதிக அமிலம் சுரந்திருப்பதை அறியலாம். இதனால் ஆபத்தான வயிற்று புண்களும், ஈஸோபாகஸில் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிக கவனம் தேவை.

கண் பாதுகாப்பு....

நமது உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த உலகத்தை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள, பார்க்க, தெரிந்துகொள்ள நமது இருவிழிகள் தான் முக்கிய காரணமாகின்றன. இன்றைய அவசர உலகில் தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் எப்படி இருக்கின்றது? 10 வயது தாண்டுவதற்கு முன்பே கண்பார்வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் தாய் _தந்தையரே முதற்காரணம். அடுத்து சத்துக் குறைவான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவது, கண் கோளாறு வரத்துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத்துவரை நாடாமல் அலட்சியமாக விட்டுவிடுவது, அதிக நாட்களுக்குத் தொடர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்துவிட்டு நோய் முற்றிய உடன் கடைசியாக மருத்துவரை நாடுவது இப்படி பல்வேறு காரணங்களினால் கண்சம்பந்தமாக பல வகையான நோய்கள் வருகின்றன.

முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்

கிட்டப் பார்வை, தூரப் பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், கண்ணில் பூவிழுதல், கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல், கண்ணில் நீர்வடிதல், மாலைக்கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால், அதன் மூலமாக வரும் தலைவலி, தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய், மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய், கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை, வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கண்ணில் நோய் வரக் காரணமென்ன?

முதலில் கூறியது போல ஆரோக்கியம் இல்லாமல் குழந்தைகளைப் பெறும் பெற்றோர் ஒரு காரணம். சத்துக் குறைவான உணவுகளை சாப்பிடுவதாலும் வரலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டாலும் கண்நோய்கள் வரும். பார்வை நரம்பில் ஏற்படும் இரத்தக்குறைவு, இரத்த ஓட்டம் தடைபடுதல், இரத்த அழுத்தம் குறைவு காரணமாகவும் கண்கோளாறுகள் வரலாம். பரம்பரைக் காரணமாகவும் கண் கோளாறுகள் வரலாம். தொற்று நோய்க் கிருமிகள், காற்றில் வருகின்ற கிருமிகள், தூசி, தீ போன்றவற்றாலும் கண் நோய்கள் வரலாம்.

உணவு வகைகளில் கண்களைப் பாதுகாக்க...

வைட்டமின் ஏ பிரிவு சத்து உடலில் குறைவாக இருந்தாலும், இரத்த சோகை, நரம்பு பலவீனம் இவற்றால் வரும் கண் கோளாறுகளுக்கு கேரட், பீட்ரூட், வெண் பூசணி, முள்ளங்கி, வெண்டைக்காய், நாட்டுத் தக்காளி, பசும்பால், பசு மோர், சுத்தமான தேன், கொத்தமல்லி, முளை கட்டிய தானிய வகைகள் இவற்றை தினசரி உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, இவைகளில் ஏதாவது ஒரு கீரை வகையை தினமும் சாப்பிடலாம்.பழ வகைகளில் பப்பாளி, மாம்பழம், அன்னாசி, மாதுளை, ஆப்பிள், பேரீச்சம் பழம், நெல்லிக்காய் சாப்பிடலாம்.அசைவ உணவில் மீன் எண்ணெய் மட்டும் சாப்பிடலாம்.

சத்துக் குறைவால் கண் நோய்கள் நீங்க...

சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும், கொத்தமல்லி இலைச்சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட் சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில்லி) தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இருவேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாக செய்ய வேண்டும்)

பப்பாளிப் பழம் 4 துண்டு, தேங்காய்ப் பால் அல்லது பசும்பால் 1 டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு பனங்கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.

புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 ஸ்பூன் தேன் இவற்றை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு இருவேளை சாப்பிடலாம்.

கண்பார்வை தெளிவடைய...

பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.

அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும்.

பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டுவரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.

மூளையும் முக்கியம்!

ஒருவர் கைகால்கள் செயலிழந்து போகும்போது அதைப் பாரிசம் அல்லது பக்கவாதம் என்று வீட்டில் உள்ளவரே கணித்து சிகிச்சையை தள்ளிப் போடுகின்றனர். அதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனென்றால் அதனால் உடனடியாக இறப்பு ஏற்படாது அன்ற எண்ணம். அதே இருதயப்பகுதியில் வலி என்றால் பதறி புரண்டு மருத்துவரைப் பார்க்க ஓடுகின்றனர். ஏன் இந்தப் பாகுபாடு?

இதய நோயாளி நடக்கலாம், பேசலாம், தன் வேலைகளை செய்து கொள்ளலாம். ஆனால் கை, கால் பாரிசம் ஆனவரோ, அவர்களின் அன்றாட செயல்களை செய்துக்கொள்வது சிரமம். அதற்கு அடுத்தவரின் துணை வேண்டுகிறது. மனதளவில் பாரிசம் ஏற்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் குன்றி குறுகி நிற்கின்றனர். ஏன் இந்த பாகுபாடு..?

ஆங்கிலத்தில் GOLDEN HOUR என்று கூறப்படும் நேரம் மிகவும் முக்கியமானது. ஒருவர் விபத்தில் அடிபட்டாலோ, இதய நோயால் மாரடைப்பு ஏற்பட்டாலோ, அல்லது பாரிசம் ஏற்பட்டாலோ, அந்த முதல் ஒரு மணி நேரக் கவனிப்பு அவருடைய குணமடைதலுக்கு துணை செய்கின்றது. பாரிசம் ஏற்பட்டவர், முதல் ஒரு மணி நேரத்தில் மருத்துவம் பெற்றால் அவருடைய குறை முற்றிலும் குணமாகலாம். ஏன் எல்லோரும் போல் நன்றாக நடந்து பேசி வேலை செய்யமுடியும்.

உதாரணமாக எங்கள் மருத்துவமனைகளில் ஒரு 35 வயது நபர் இடது பக்க பாரிசத்துடன் 15 நிமிடங்களில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்து, அவருக்கு சிகிச்சை உடனடியாக தொடரப்பட்டது, அவர் 10 நாட்களில் முழுவதுமாக குணமாகி வீட்டுக்கு சென்றார். இன்று அவர் என்ன தொழில் செய்துக்கொண்டிருந்தோரோ அதையே தொடர்ந்து செய்து வருகின்றார்.

பாரிசத்திற்கு இன்னொரு காரணம் உண்டு. அதாவது மூளையில் மண்டை ஒட்டிற்கும் மூளைக்கும் இடையே இரத்தம் சேர்ந்து அது அழுத்தம் கொடுக்கின்றது. அதை Subdural Hematoma என்பர்.

எதனால் ஏற்படுகின்றது? (Chronic subdural Hemation) தலைக்காயம் பட்டால் ஏற்படலாம், ஆனால் 6 வாரத்தில் இருந்து. 11\2 வருடம் வரை வரலாம். இது மெதுவாக கசிந்து கட்டியாகும்போது தான் தன்மையை காட்டுகின்றது. அது பெரிதாகும்போது எந்த பகுதியில் உள்ளதோ அதற்கு எதிர்பகுதி கை கால்கள் செயல் இழந்து போகின்றன. கோமா நிலை ஏற்படுகின்றது.

இந்த நோயாளியை உடனடியாக CT scan படம் எடுத்து பார்த்தால், இந்த காரணம் தெரியும். அதை உடனடியாக அறுவை சிகிச்சையின் மூலம் அப்புறப்படுத்தினால் நோயாளி தன் சுய நினைவை அடைந்து, கை, கால் பாரிசம் குறைந்து நன்றாக குணமடைவர்.

எங்களிடம் ஒரு 70 வயது பெரியவர் கொண்டுவரப்பட்டார். அவர் நினைவு இல்லாமல் கோமா நிலையில் இருந்தார். அவருக்கு வலது கை கால்களில் செயல் இல்லை. அவருடைய மூளைப்படம், இடது மூளைப்படத்தில் இரத்தக்கட்டி இருப்பது தெரிந்தது. அதன் அளவு பெரியதாக இருந்ததால் இடது மூளை வலது மூளையை தள்ளிக்கொண்டு இருந்தது. நோயாளியின் மகன்கள் அவர் குணமடைவாரா என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இந்த அறுவை சிகிச்சையினால் அவர் முற்றிலும் குணமடைவார். மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் போதே அவர் நினைவு பெறுவார் என்று கூறி அறுவை சிகிச்சை செய்தேன். மூளையின் சவ்வை திறக்கும்போது இரத்தம் வெளிவந்தது. அவ்வாறு வெளிவரும்போதே அவர் நினைவு திரும்பியது, சப்தம் போட ஆரம்பித்தார். அறுவை சிகிச்சை முடிந்து வெளிவரும்போது அவரின் மகன்களுடன் பேசினார். 5 ஆண்டுகளுக்கு பின்னும் நன்றாக நடந்துகொண்டு சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பாரிசம் என்பது கை, கால், செயல் இழப்பை குறிக்கின்றது. அதற்கான காரணங்கள் ஏராளம். அதை மூளை படம் எடுப்பதால் தெரிந்து கொள்ளலாம். (Chronic subdural hematoma) நாள்பட்ட இரத்த கசிவினால் ஏற்பட்ட பாரிசம் அறுவை சிகிச்சை செய்தவுடன் குணமடையும். குடிப்பழக்கம் இருப்பவருக்கு இந்த இரத்த கசிவு சுலபமாக வருவதுண்டு. எனவே குடிப் பழக்கத்தை நிறுத்த பழகிக்கொள்ள வேண்டும். பாரிசம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சைக்கு நரம்பியல் நிபுணரிடம் கொண்டு செல்லுங்கள்.

உணர்வுபூர்வமாக எந்த விஷயத்தையும் அணுகுவதை விட அறிவு பூர்வமாக அணுகுவது தெளிவைத் தரும் தானே? எதைக் குறிப்பிடுகிறேன் என்கிறீர்கள்...? இதய நோய்க்கு தரும் முக்கியத்துவத்தை மூளை நோய்க்கும் தர வேண்டும் என்பதைத் தான் அதோடு குடிப்பழக்கம் குடியை மட்டும் கொடுப்பதில்லை. மூளையையும் பதம் பார்க்கிறது. குவாட்டர், லார்ஜ், ஸ்மால் இந்த வார்த்தைகளோடு இனி பாரிசம் என்ற வார்த்தையையும் சேர்த்து சியர்ஸ் சொல்லுங்கள். குடிப்பழக்கம் தானாக ஓடிவிடும்.

குழந்தை அறிவு திறனை மழுங்கடிக்கும் புகைத்தல்

புகைப்பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள், அதை பிடிப்பவரை மட்டும் பாதிக்காமல், சுவாசிப்பவர்களையும் பாதிக்கும் என்று தெரியும். அதிலும் புகையை சுவாசிப்பவர்கள் குழந்தைகளாக இருந்தால் உடல் பாதிப்புகள் கூடுதலாக இருக்கும் என்பதும் அறிந்ததே. ஆனால் புகையிலைப் பொருட்கள் மூலம் உண்டாகும் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு அறிவுத் திறன் மங்கும் என்பதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
அமரிக்காவில் செகண்ட் ஹhண்ட் ஸ்மோக்கிங் பழக்கத்தால் சிறுவர்களின் அறிவுத் திறன் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது? என்று கண்டுபிடிக்க 4400 சிறுவர்கள் பங்கேற்ற ஒரு ஆய்வு நடந்தது. இந்த சிறுவர்கள் அனைவரும் 6 முதல் 16 வயது வரை நிரம்பியவர்கள். முதலில் புகையிலையில் காணப்படும் நிகோட்டின் எனும் வேதிப்பொருளால் உண்டாகும் மாற்றத்தின் அளவு கணக்கிடப்பட்டது. பின்னர் குழந்தைகளின் அறிவு திறன் சோதிக்கப்பட்டது. இதற்காக வாசிக்கும் திறன், கணித அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போது மேற்படி வேதிப்பொருள் அதிகமாக காணப்படும் குழந்தைகளின் அறிவுத் திறன் குறைந்து இருந்தது தெரிய வந்தது.

குறிப்பிட்ட வேதிப்பொருள் அதிகமாக காணப்படுகிறதென்றhல் அக்குழந்தை செகண்ட் ஹhண்ட் ஸ்மோக்கிங்கினால் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது என்று அர்த்தம். இதற்கு தந்தை உள்ளிட்ட நெருங்கிய உறவுகளே காரணமாக இருக்க முடியும். ஏனெனில் குழந்தைகள் பெரும்பாலும் வீடுகளில் தான் அதிக நேரத்தை கழிக்கிறார்கள். இதுமாதிரி நேரத்தில் அவர்களுக்கு செகண்ட் ஹhண்ட் ஸ்மோக்கிங் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் நெருங்கிய உறவுக்காரர்களாக தான் இருக்க முடியும். அடுத்து குழந்தைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் புகைப்பிடிப்பவர்களும் இதற்கு காரணம்.

இந்நிலையில் தாங்கள் விடும் புகையால் குழந்தைகள் எந்தளவுக்கு பாதிக்கப் படுகிறhர்கள் என்ற அறிவு, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே குழந்தைகளை இப்பிரச்சினையில் இருந்து காப்பாற்ற முடியும்.

உணர்ச்சியைத் தூண்டுமா போதைப்பொருட்கள்?

செக்ஸ் மனமொத்த மகிழ்ச்சியான அனுபவம் நம் மனதையும் சூழ்நிலையையும் பொறுத்தது. உடலளவில் பார்த்தால் ‘டெஸ்ட்ரோஸன்’ என்னும் ஹார்மோன் அளவைப்பொறுத்தே அமைகின்றது. இது ஆண், பெண் ஒரு பாலாருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில்தான் சுரக்கிறது. போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன்களை வேகமாக சுரக்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை. இயற்கைக்கு மாறாக நரம்புகளைச் சுண்டிவிடும். அதனால்தான் போதை மருந்து உட்கொண்டு விளையாட்டில் வெற்றி பெறுபவரை வெளியேற்றி விடுகின்றனர்.

அதேபோல் செக்சிலும், போதைப் பொருட்கள் சில நேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது, நம் உடல் தன் நிலையை மறந்துவிடத் தொடங்குகிறது. போதைப் பொருட்கள் உணர்ச்சியைத் தூண்டுவது போன்று தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாதது. அதேபோல் உச்சகட்டத்தைப் பெறவும் உதவாது. சமயங்களில், அந்த நிலையையே தடுத்துவிடும் ஆற்றல் படைத்தது. சிகரெட் பிடித்தாலும் பெண்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய பெண்களுக்கு, அவரகளது உறுப்பில் வழவழப்புத் தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவைக் குறைத்து வறட்சித் தன்மையை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம், சிகரெட்டில் உள்ள ‘நிகோடின்’ ஆகும்.

மன உளைச்சலைக் குறைக்கும் சில மருந்துகளுக்குக் கூட இத்தன்மை உள்ளது. இதுபோன்ற மருந்து வகைகள், ‘சிரோட்டி னின்’ அளவைக் கூட்டுகின்றன. அதேசமயம்,‘டெஸ்ட்ரோன்கள்’ வேலையைக் குறைக்கிறது. ‘டெஸ்ட்ரோனே‘ செக்சைத் தூண்டும் முக்கிய ஹார்மோன் என்பது நாம் அறிந்ததே. அண்மைக் காலங்களில், கருத்தரிப்பைத் தடுக்க பல்வேறு கருத்தடை மருந்துகள் உட்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக ‘புரோஜஸ்டின்’ எனப்படும் மருந்து வகையை உட்கொள்ளும் பொழுது, செக்ஸ் உணர்வு, குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

ஆண்களுக்கு 18 அல்லது 20 வயதில் உள்ள அதே அளவுதான் பெண்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கும். ஆனால் ஆணுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பெண்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. பெண் என்பவள், உடலியல் ரீதியாக, இரண்டாம் பட்சமாகவே கருதப்படுகிறாள். அதன் விளைவாக, கட்டுப்பெட்டித்தனம் ஏற்படுகிறது. பெண்கள், தங்களுடைய செக்ஸ் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளவும் முடியாது. போதைப் பொருட்கள் போலவே, மதுவும் உடலின் நரம்புடன் நேரடியாக தொடர்பு கொள்வதால், முதலில் மகிழ்ச்சியாக இருக்கும்.ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, நரம்பு மண்டலத்தை உளையச் செய்துவிடும். குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் மதுவை உட்கொள்ளும்பொழுது அவர்களை மயக்க மடையச் செய்கிறது. என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் அவர்களை மாற்றி விடுகின்றது.

செக்சில் உச்சக்கட்டத்தை விருப்ப மற்ற நரம்புமண்டலத்தை தூண்டி ஏற்படுத்தி விடுகிறது. மது நேரடியாகவே அந்த குறிப்பிட்ட மண்டலத்தை தாக்குகின்றது. எனவேதான் “மது அருந்தியவர்களால் இரவில் செக்சில் ஈடுபட முடியும். ஆனால் அதுமுடிந்து மகிழ்ச்சி இருக்குமோ என்று பார்த்தால் சந்தேகமே” என்கிறார் பிரபல மருத்துவ வல்லுநர் சீபர் அவர்கள். அதேபோல், செக்சில் இருவரும் தங்கள் விருப்பங்களைத் தெளிவான முறையில் தெரிவித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், சிக்கல்தான்! சிக்கல் தோன்றிவிட்டால் பிறகு எப்படி முழுமையான இன்பத்தைப் பெறமுடியும்? மன உளைச்சல் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட்டால் மற்ற வேலைகளையும் பாதிக்கும். செக்சில் நிறைவைப் பெற விடாமல் தடுக்கக்கூடிய காரணிகளில் ஒன்றான போதைப்பொருள்களை தவிர்ப்பது செக்சிற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பயனளிக்கக் கூடியதாகும்.

வாய் நாற்றமா? பல்வலியா? பல்லீறுகளில் இரத்தமா?

செய்முறை : 1

கீழாநெல்லிக்கீரையை மென்று பல்விளக்கி வர தீராத வாய்நாற்றம், பல்வலி தீரும்.

குறிப்புகள் :

1, தினமும் ஏராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. உணவு உண்டபின் நன்றாக பல் துலக்க வேண்டும்.
3. இரவு அதிக நேரம் கண் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

செய்முறை : 2

அதிமதுரம் - 50கிராம்
நன்னாரி - 50கிராம்
சந்தனம் - 20கிராம்
திரிபலைத்தோடு - 10கிராம்
ஏலம் - 5கிராம்

இவற்றை நன்றாக தூள் செய்து ஒரு கரண்டி வீதம் எடுத்து தண்ணீரில் நன்றாக கொதிக்கவைத்து, காலையில் வெறும் வயிற்றிலும், இரவு சாப்பாட்டிற்கு பின்னரும் சாப்பிட்டு வந்தால் கீழ்கண்ட நோய்கள் தீரும்.

1. வாய் நாற்றம்
2. குடல் புண்
3. வயிற்றுப்புண்
4. வயிற்றுவலி
5. குமட்டல்
6. வாந்தி
7. பித்தம்
8. பசியின்மை, ருசியின்மை

இது சிறுநீரக கற்கள், கல்லீரல் கற்கள் தோன்றாமல் தடுக்கும். மிகச்சிறந்த மருந்து, தொடர்ந்து பயன்படுத்தினால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும்.


கொழுப்புணவா? இதோ உடனடி மருந்து

- என். கே. கலா

பொதுவாக கொழுப்புச்சத்து மிகுதியாவது உடலுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். எனினும் இரண்டு மூன்று திருமணங்கள் பிரியாணி. சிக்கன் - மட்டன் என வந்துவிட்டது... என்ன செய்வது வேறு வழியில்லை... மனமும் சும்மா இருக்கவில்லை. சாப்பிட்டு விட்டோம் என்றால் உடனே இந்த மருந்துணவை மறக்காமல் சாப்பிடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்.

செய்முறை : 1

இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 இதழ்
கறிவேப்பிலை - 5 இலை
நல்லமிளகு 3 எண்ணம்.

இவற்றை நன்றாக அரைத்து வெந்நீரில் கலக்கி குடித்துவிடவும்.

செய்முறை : 2

இஞ்சி, பூடு, காந்தாரிமிளகு (அ) நல்லமிளகு, உப்பு சேர்த்து துவையலாக செய்து விழுங்கி வெந்நீரில் குடித்துவிடவும்.

செய்முறை : 3

இஞ்சி, பூண்டு இரண்டையும் சிறு அளவு எடுத்து சீனி சேர்த்து வெந்நீரில் ஜுஸாக கலக்கி குடித்து விடவேண்டும்.

இப்படி ஏதேனும் ஒன்றை செய்துகொண்டால் அந்த உணவின் கொழுப்புத்தன்மை நம் உடலை பாதிக்காமல் இருக்கும்.

தலைவலி

உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்பட்டவராகவே இருப்பர். ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும், ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும். ஒரு சிலருக்கு காலையில் வரும். ஒரு சிலருக்கு மாலையில் வரும். ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும். ஒரு சிலருக்கு இருபுறமும் வரும். ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும். ஒரு சிலருக்கு பின் மண்டையில் வரும். ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும். ஒரு சிலருக்கு தூக்கத்திலிருந்து திடீரென விழிக்க நேர்ந்தால் வரும். ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும். ஒரு சிலருக்கு பனியில் நடந்தால் வரும். ஒரு சிலருக்கு மன உளைச்சலால் வரும். ஒரு சிலருக்கு நோயின் வெளிப்பாடாக வரும். ஒரு சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலே வரும். ஒரு சிலருக்கோ எப்ப வரும்? எப்படி வரும் என்று தெரியாது. ஆனால் அடிக்கடி வரும். வந்தால் மிகுந்த தொல்லையையும் சங்கடத்தையும் உண்டாக்கும் இயல்புடைய நோய் இது. அதனால் சாதாரணமாக சங்கடம் உண்டாக்கும் நபர்களைப் பார்த்து, இந்த ஆளோடு பெரிய தலைவலியா போச்சு என்று பல நேரங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். தலைவலியின் கல்யாண குணங்களை நோக்குவோம்.

நோய்க் காரணம்: தலைவலி கீழ்கண்ட ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக வரலாம்.

1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் (Hypoglyceamia): உண்ணும் உணவில் சர்க்கரை அளவு குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்திலும் சர்க்கரை அளவு குறையும். இதனால் மூளையின் செயல்பாடுகள் குறையும். அப்பொழுது அதிக அளவு இரத்தம் மூளைக்கு செல்லும் நிலை ஏற்படும். அதன் காரணமாக மண்டையின் உள்புற இரத்தக் குழாய்கள் விரிவடையும். அதனால் தலைவலி உண்டாகும்.

2. அதிக இரத்த அழுத்தம் (Hypertension): இதிலும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் விதமாக இரத்தக் குழாய்கள் விரிவடையும். இரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளும் இரத்தக் குழாய்களை விரிவடைய செய்யும். அதனால் உள்மண்டை இரத்தக் குழாய்களும் விரிந்து தலைவலி ஏற்படும்.

3. இரத்தக் குழாய் நோய்கள (Vascular Disease): நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம் போன்றவற்றில் இரத்தக் குழாயில் உப்பு, சர்க்கரை படிவங்கள் படிவதால் இரத்தக் குழாய், சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. அதனால் தலைவலி வரலாம்.

4. மன அழுத்தம் (Mental Tension): மன அழுத்த நோயிலும் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன்பின் விளைவாக தலைவலி வரலாம்.

5. உள்மண்டை இரத்தக்கட்டு (Oedeama Intra Cranial): தலையில் அடிபடுவதால் உள்மண்டையில் இரத்தம் கட்டி, அது மூளையின் பகுதிகளை அழுத்துவதால் தலைவலி வரலாம்.

6. மூளைக் கட்டிகள் (Intra Cranial Tumous): மூளையில் உண்டாகும் கட்டிகள் மூளையையும், சுற்றியுள்ள இரத்தக் குழாய்களையும் அழுத்தும் தன்மை உடையதால் தலைவலி உண்டாகும்.

7. கண்பார்வைக் கோளாறுகள் (Refractive Errors): பெரும்பாலோருக்கு தலைவலி ஏற்படும் முக்கிய காரணம் பார்வை கோளாறுகளேயாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள் கண்களை அதிக அளவு பயன்படுத்தும் நிலை ஏற்படும். இது தலைவலியை அதிக அளவு உண்டாக்கும். பார்வை நரம்புகள் மய்யம், மூளையின் பின்புறம் உள்ளதால், பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் தலைவலி பெரும்பாலும் பின் மண்டையில் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

8. முகக் காற்றறை அழற்சி (Sinusitis) : சளி ஏற்படும் பொழுது காற்றறை அழற்சி ஏற்படும். சிலருக்கு தூசுகளால் அழற்சி ஏற்படும். இதில் மிகவும் அதிகமாக மேல்தாடை காற்றறை பாதிக்கப்படும். இதனாலும் தலைவலி உண்டாகும். இது பெரும்பாலும் நெற்றி, பக்கவாட்டில் தலைவலியை உண்டாக்கும். காற்றறைத் தலைவலி என்றே இதை கூறுவர்.

9. பல்நோய்கள் (Dental Diseases): சரியாக முளைக்காத மூன்றாம் கடைவாய் பல் தலையின் பக்கவாட்டில் உள்ள சதைப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தும். இதனால் பக்கவாட்டில் தலைவலி ஏற்படும்.

10. ஒற்றைத் தலைவலி (Migrane): மிகவும் கடுமையான வலியான இது பெரும்பாலும் மன உளைச்சல் காரணமாகவே ஏற்படும். சிலருக்கு தலைமுறை வியாதியாக வரலாம். கழுத்திலும், தலைக்குச் செல்லும் இரத்த குழாய்கள் மன அழுத்தத்தால் விரிவடையும் இதனால் வலி ஏற்படும்.

மருத்துவர்கள் தலைவலியை வேறு வகையாக வகைப்படுத்துகின்றனர்.

1. இரத்தக் குழாய் தலைவலி (Vascular Headache) 2. உள்மண்டை மிகு அழுத்தத் தலைவலி (Increased Intra Cranial Tension) 3. மூளை உறை அழற்சி, மூளை அழற்சி (Inflamation) 4. தசைச் சுருக்கம் (Muscle Spasm) 5. பிற இடங்களில் இருந்து பரவும் தலைவலி (Referred Headache) என மருத்துவர்கள் தலைவலியை பாகுபடுத்தினாலும், தலைவலி நாம் ஏற்கனவே சொன்ன 10 காரணங்களில் ஒன்றால்தான் வரும். அவை மருத்துவர்களில் பாகுபாடுகளில் உள்ளடங்கியதாக இருக்கும்.

மேற்கூறிய காரணங்களால் மண்டையின் உள்புறம் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. எலும்பின் கட்டித் தன்மையால் ஓரளவிற்கு மேல் விரிவடைய முடியாததால் தலைவலி ஏற்படுகிறது. ப்ளுகாய்ச்சல், மூளை அழற்சி, மூளை உறை அழற்சி ஆகியவற்றில் மண்டையின் இரத்தக் குழாய் விரிந்து தலைவலி ஏற்படுத்தும். மலைப் பகுதிகளின் உயரம், பசி, இரத்தச் சோகை, மிகு இரத்த அழுத்தம் போன்றவையும் உள் மண்டை இரத்தக் குழாயில் விரிவை உண்டாக்கி தலைவலி ஏற்படுத்தும்.

மருத்துவம்: தலைவலி பெரும்பாலும் ஒரு நேரடியான நோய் இல்லை. எனவே தலைவலி என்றாவது ஒரு நாள் வந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அதுவே ஒரு தினசரி தொல்லையாகும் பொழுது, கட்டாயம் வேறு நோய்கள் ஏதேனும் இருக்கும். பல நேரங்களில் தொடர்ச்சியான தலைவலிக்கு சோதிக்கும் பொழுது, வேறு சில நோய்கள் இருப்பது தெரியவரும். அதனால் தலைவலிதானே என்று அலட்சியப் படுத்தாமல், சரியான சோதனைகளை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. தலை வலிக்கும் பொழுது வலி மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு, பேசாமல் இருப்பவர்களே அதிகம். இது தவறான பழக்கம். தலைவலி அடிக்கடி வந்தால் அதன் அடிப்படை மூலகாரணம் என்னவென்று ஆய்ந்து, அதற்கான மருத்துவம் செய்து கொண்டாலே தலைவலி தானே சரியாகி விடும். எடுத்துக்காட்டாக பார்வைக் கோளாறால் வரும் தலைவலி, பார்வைக் கோளாறை சரி செய்வதால் சரியாகிவிடும்.

அதேபோல் ஒற்றைத் தலைவலி சரியான மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

சரியான ஆய்வுகளும், சரியான மருத்துவமும் செய்து கொண்டால், தலைவலி நமக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறாமல் குணமடையும் என்பது நிச்சயம்.

தாமதமாக திருமணமாகும் பெண்கள் உறையவைத்த கருமுட்டை மூலம் குழந்தை பெறலாம்

பொதுவாக கருமுட்டை உற்பத்தி இருக்கும் வரை பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் சில பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வரன் அமைவதில்லை. அதனால் திருமணம் தாமதமாகிறது.

மேலும் வேலை பார்க்கும் பெண்களில் சிலர் உயர் பதவியை பெற வேண்டும், வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதித்த பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள னர். இதனாலும் அவர்களின் திருமணம் தள்ளிப் போகிறது.

இதுபோன்று 30 முதல் 35 வயதுக்கு மேல் திருமணம் செய்யும் பெண்கள் குழந்தை பெற உறைய வைத்த கருமுட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

திருமணத்துக்கு தாமத மாகும் நல்ல உடல்நலமுள்ள பெண்ணின் கருமுட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. அவை மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் சீதோஷ்ணத்தில் திரவ நைட்ரஜனில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. அந்த கருமுட்டை செயல் இழக் காமல் இருக்க அதற்கு ஹார்மோன்கள் ஊசிமூலம் செலுத்தப்படுகின்றன.


இவ்வாறு பாதுகாக்கப்படும் கருமுட்டைகளை 30 முதல் 40 வருடங்கள் வரை பாதுகாக்க முடியும். இந்த கருமுட்டையின் மூலம் தேவையானபோது பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

கருமுட்டையை உறைய வைக்க ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகும். அவற்றை பாதுகாக்க ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் தேவைப்படும். இந்த தகவலை கருவூட்டல் நிபுணர் டாக்டர் கிரிஷிகேஷ்பை தெரிவித்தார்.

திருப்தியான சுகம்!

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்பட்ட செக்ஸுவல் எக்ஸ்பீரியன்ஸ் அவர்களுடைய வாழ்க்கை பாதையையே திசை திருப்பியதற்கு எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இயந்திரத்தனமாக வாழ்க்கை நடத்தும் பல தம்பதிகள் செக்ஸுவல் ரிலேஷன்ஷிப்பிலும் அதே வேகத்தை காட்டிவிட்டு வாட் நெக்ஸ்ட்? என்பதில் மூழ்கி விடுகிறார்கள். ஆண்கள் எங்களுடைய உணர்ச்சிகளை, ஏக்கங்களை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள் பெண்கள். இது 75% பெண்கள் கேட்க கூடிய எதிர்பார்ப்பு கேள்விக்கு ஆண்களிடம் இருந்து விடை கிடைக்குமா என்றால் இல்லை. திருமணத்துக்கு முன்பு டீன் ஏஜில் இருந்த செக்ஸ் ஆர்வம், திருமணம் என்ற கூண்டு சிறைக்குள் அடைப்பட்ட பின்பு சிலருக்கு குறைந்துவிடுவது உண்மை. அதற்கு காரணம் குடும்ப கவலை, கூட்டு குடும்பத்தில் எழும் பிரச்சனைகள், மன விரிசல், இன்னும் எத்தனையோ சொல்லலாம்.


பிரச்சனைகளுக்கு மத்தியில் போராடும் ஆண்களுக்கு செக்ஸ் ஆக்ஷனில் ஈடுபாடு குறைவது சகஜமே. இதனால் பிரச்சனைகளை தாண்டிய செக்ஸ் உறவு அதாவது வேறு சானலில் அவனது மனம் தாவுகிறது. தன் மனைவியோடு உறவு வைத்துக் கொள்வதையே தவிர்க்கிறான், அல்லது விலகுகிறான். ஆணோ பெண்ணோ தாம்பத்ய உறவில் ஈடுபட முற்படும்போது எல்லா தலைவலிகளையும் ஒதுக்கி வைத்துவிட வேண்டும். குடும்ப பெண்களின் மனக்கவலையே, எங்களது டயர்டை ஹஸ்பண்ட் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான். அனிமல் ஆக்ட் மாதிரி ஃபோர்ஸ் பண்ணிட்டு போயிடறாங்க என்று கோபத்தோடு கேட்கும் பெண்களும் உண்டு. இந்த ப்ராப்ளம் நிறைய பேமிலியில இருக்கு. ஆண்களை பொறுத்த வரையில் செக்ஸ் மூட் வந்துவிட்டால் நேரம், காலம் பார்ப்பது கிடையாது என்பது நிறைய பெண்கள் சொல்கிற ஸ்டேட்மென்ட். மனைவியின் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு சந்தோஷபடுத்தி உறவு கொள்ளும் ஆண்கள் மிகக்குறைவு. செக்ஸ் ஆக்ஷன்ல ஆண்கள் சர்வாதிகாரியா இருக்கனும்னு நினைக்கிறாங்க. அது அன்பு கலந்த அரவணைப்பு, உணர்ச்சியை புரிந்து கொண்டு ஈடுபடுவதிலும் இருக்கு. அதற்காக ஒன் சைட் திருப்தி, மறுபக்கம் சித்ரவதையாக இருக்க கூடாது. சிறு சிறு விஷயங்களுக்கு டாக்டரிடம் கவுன்சிலிங் போகவும் முடியாது. ஹஸ்பண்டிடம் மனம்விட்டு தங்களது ஹெல்த், உணர்ச்சிகள், மூட் பற்றி பக்குவமாக சொல்லணும். அதையே அட்வைஸ் மாதிரி சொன்னால் ஆண்களுக்கே உள்ள ஈகோ ஓவராகி கத்த அரம்பித்துவிடுவார்கள். இது தினமும் நடக்கக்கூடிய, பார்க்கக்கூடிய பிரச்சனை. அதனால், அவர் பிரண்ட்லியாக நல்ல மூட்ல இருக்கும்போது வாழைப்பழத்தில் ஊசியை சொருகிற மாதிரின்னு ஒரு பழமொழி சொல்வாங்களே அதுமாதிரி உணர்ச்சிகளை புரிய வைத்தால் தெளிவு பிறந்துவிடும்.

இதே போல் ஒவ்வொரு குடும்பத்திலும் புரிந்து கொள்ளும் தன்மை இருந்தால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனையே இல்லை....சந்தோஷம் மட்டும் தான்....

தினமும் ஒயின் குடித்தால் நீண்டநாள் வாழலாம்

நோயின்றி நீண்ட நாட்கள் வாழ உணவில் கட்டுப்பாடு அவசியம் என முந்தைய ஆய்வு தகவல்கள் தெரிவித்தன. அதன் மூலம் மூளையில் நோய்கள் ஏற்படாது. ஞாபக சக்தியில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.

அளவான உணவை சாப்பிட்டால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். கேன்சர் நோய் ஏற்படாது என்று கூறப்பட்டது. தினமும் சாப்பிடும் போது மது அருந்தினால், குறிப்பாக ஒயின் குடித்தால் நோயின்றி நீண்ட நாள் வாழலாம் என தற்போதைய ஆய்வு தெரிவித்துள்ளது.

அத்துடன் சிறிதளவு இறைச்சி மற்றும் இறைச்சி சம்பந்தப்பட்ட உணவு வகைகளை உணவுடன் சேர்த்து கொள்ள வேண்டும். அதே சமயம் அதிக அளவு காய்கறிகள், பழங்கள் மற்றும் கொட்டை வகை உணவுகள், ஆலில் எண்ணையையும் சேர்த்து சாப்பிட்டால் நோயின்றி வாழலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆய்வை லண்டனில் உள்ள பொது சுகாதார கல்வி நிறுவனம் நடத்தியது. 23 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

டீன்-ஏஜ் பெண்ணின் பிரச்னை தெரியுமா?

பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.

இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதேபோல், இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியது அவசியம்.

டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன?

* பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

* சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.

* அடுத்து, இளம் பெண்களுக்கு, தன் சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.

* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இதுகுறித்து கவலைப்பட வேண் டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு, வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.

* வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.

* இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால்,ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.

காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா?

காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா? அல்லது ஒரு காலகட்டத்தில் இந்த உணர்ச்சி ஆட்டுவித்தல் என்பது மேலோங்கி நிற்குமா?

இதுபற்றி ஏற்கனவே நாம் போகஸ்தானம் குறித்துப் பேசியுள்ளோம். பொதுவாக இலக்கியங்களிலெல்லம் குறிப்பிடுவது மாதிரி கண்ணோடு கண் நோக்கினாள் என்று கண்ணைத்தான் முக்கிய காரணமாகச் சொல்வார்கள். சூரியன், சந்திரன் பார்வைக்குரிய கிரகங்கள். ஆனால், காம உணர்வுகளைத் தூண்டக்கூடிய கிரகம் சுக்ரன்தான். இதுதான் பாலியல் இந்த உணர்வுகளுக்கெல்லாம். அடுத்து, புணர்ச்சி, உணர்ச்சி, வேகம், செயல்பாடு இதற்கெல்லாம் உரிய கிரகம் செவ்வாய். எவ்வளவு நேரம், எப்படிப்பட்டது என்பதெல்லாம் நிர்ணயிப்பது செவ்வாய். இப்படி பல கிரகங்கள் அதில் அடங்கிக் கிடக்கிறது.

வாலிபத்தில் இருக்கும் காமம் கூட முறையாக செய்கிறது. ஆனால் வாலிபத்தை தாண்டி தனக்கு பிறந்த பெண்ணோ, பிள்ளையோ மணமுடிக்ககூடிய அளவிற்கு இருக்கும் போது கூட காம உணர்ச்சி அதிகரிப்பது ஏன்?

இதெல்லாம் பார்த்தீர்களானால் யவனம், இளமை, உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது, நரம்புகளைத் தூண்டக்கூடியது புதன். சிலருக்கு காலம் கடந்து கல்யாணம் நடக்கும், சிலருக்கு சீக்கிரம் நடக்கும். அது முக்கியம் கிடையாது. சிலருக்கு 55இல் இருந்து 75 வரை சுக்கிர திசை நடக்கும். அந்த நேரத்தில பார்த்தீர்களானால் காம உணர்ச்சி அதிகமா இருக்கும். முன்பே கூறியபடி, கண் பார்வை சூரியன், சந்திரன். அது பார்க்கும் போதே தூண்டுகிறது. ஆனால், சுக்கிரன்தான் காமத்திற்கு பிரதான கிரகம். அதனாலதான் சுக்கிரனில் இருந்து நீட்சமானாலோ, தவறான கிரகங்களில் சேர்ந்திருந்தாலோ முறையற்ற புணர்வுகளெல்லாம் நிகழும்.

“மகாலஷ்மி மாதிரி மனைவி இருந்தும், குரங்கு மாதிரி வைப்பாட்டி வச்சிக்கிறது” இதெல்லாம் வந்து சுக்கிரனோட ராகு, கேது, சனி இதெல்லாம் சேரும் போது, குறிப்பா சுக்கிரனோடு சனி இருந்தால் மாற்றநிலை புணர்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான கிரக சீர்த்திகள் உண்டு. இரண்டு கிரகங்கள் சேரும் போது மட்டுமே இந்த மாதிரி இருக்கமாட்டார்கள். ஏதேனும் ஒரு கிரகத்தின் திசை வரும்போது இந்த மாதிரியான புணர்ச்சி மாறுபாடுகள், தவறுகள் உண்டாகிறது.

“ரொம்ப நல்ல மனுஷங்க என் புருஷன், நிமிர்ந்துகூட பார்க்க மாட்டாருங்க. இப்ப இந்த மாதிரி ஆயிட்டாருங்க” என்பதெல்லாம் அந்த கிரகத்தோடு திசை அதுவரை வரவில்லை என்று அர்த்தம். அது வந்த உடனே அப்படியே மாறுவார்கள்.

காலம் கடந்த ஞானம்னு சொல்லுவார்கள். ஆனால், காலம் கடந்த காமம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது இல்லையா?

எனக்கு தெரிந்த ஒருவர், திருமணம் ஆனவர். தொழிலில் கடுமையான போட்டி
காரணமாக கடுமையாக உழைக்க வேண்டிய நிலை. இரவு 11.30 மணிக்கு வந்து படுப்பது, காலையில் எழுந்து சென்றுவிடுவது என்று இருந்தது. அப்பொழுது காமமே இல்லாமல் இருந்துவிட்டார். ஆனால், இப்ப ஒரு கடைக்கு நான்கு கடைகள் கட்டி முடித்துவிட்டார். அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். ஆனால், அவரும் திருமணம் செய்துகொண்டார். ஏனென்றால், இப்ப அவருக்கு சுக்கிர திசை. இப்ப அவருக்கு வயசு 69. ஆனால் அவரைப் பார்த்தால் அப்படி சொல்ல மாட்டீர்கள். முதலில் ஒல்லியா இருந்தாரு. இப்ப சுக்கிர திசைன்றதால, உடம்பெல்லாம் பூசின மாதிரி, மலர்ந்த முகம் அந்த மாதிரி இருக்கிறார்.

அப்ப இளமை திரும்புகிறது என்பதெல்லாம் உண்மைதானா?

இதெல்லாம் நாங்கள் அனுபவப்பூர்வமா பார்த்தது. இப்ப அந்த திருமணமானவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இளமைக் காலத்தில பிறந்த அந்த இரண்டு குழந்தைகளை விட இந்தக் குழந்தை தகதகன்னு இருக்கிறது.

போன வாரத்தில் ஒருவர் வந்தார். முன்பெல்லாம் புணர்ச்சியின் போது என்னோட மனைவியால ஈடுகொடுக்கவே முடியாது. ஆனால் இப்போது என்

மனைவிக்கு என்னால ஈடுகொடுக்க முடியவில்லை என்று சொன்னார். மூன்று வருடமா இந்தப் பிரச்சனை இருக்கிறது என்றும் சொன்னார்.

அவருக்கு பார்த்தீங்கன்னா, சனியும், புதனும் ஒன்றாக சேர்ந்து போகஸ்தானத்துல உட்கார்ந்த நிலையில் சனி திசை வந்துவிட்டது. சனியும், புதனும் 3ஆம் இடத்தில் சேர்ந்திருந்தா நக்குவது போன்றே இருக்கும். உயிர் குறி எழும்புவது, அதனோட வேகங்கள் இதெல்லாம் இருக்கும். ஏனென்றால் இந்த இரண்டுமே அலி கிரகங்கள். அலி கிரகங்கள் இரண்டும் சேர்ந்து போகஸ்தானத்தில் போய் சேரக்கூடாது.

அந்த டாக்டரைப் பார்த்தேன், வயாக்ரா வாங்கினேன் அப்படி இப்படின்னு சொன்னார். தயவு செய்து எங்கேயும் போய் அலையாதீங்க. இதுக்கான சில உணவு வகைகளெல்லாம் இருக்கிறது. இப்ப சனிக்கு கம்பு, கேழ்வரகு, மக்காச் சோளம் அந்த மாதிரி உணவுகளை உட்கொள்ளுங்கள். பிறகு சனிக்கு திறந்தவெளியில அதிக நேரம் இருந்தால் நல்லது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொட்டை மாடியில வாக்கிங் போங்க. திறந்தவெளியில் காற்று வாங்குங்க, அவித்த உணவுகளைவிட இயற்கை உணவுகளை எடுத்துக்குங்க அப்படீன்னு சொல்லி அனுப்பினேன்.

சனி இயல்பான கிரகம். இயற்கையான கிரகம். அதனால் இயற்கை உணவுகள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். அப்புறம் வந்தாரு. நல்ல மாற்றம் இருக்குங்க என்று சொன்னார்.

இதேபோல பெண்களுக்கும் ஏற்படும் இல்லையா?


ஆமாம், அவருக்கு சில பரிகாரங்களையும் சொல்வோம். பாதரசம், சில வேர்களுடைய சாறு, சில மூலிகைகளுடைய சாறுகளை கட்ட முடியும். அதாவது கட்டுகட்டுவது என்று சொல்வார்கள். அதை அணிந்துகொண்டு புணரும்போது, அதாவது முதுகுத் தண்டுவடம் முடியும் இடத்தில் அந்த மணியை நிறுத்திவிட்டு புணரும்போது புணர்ச்சி வேகம் அதிகரிக்கும். அதுமாதிரி சில பரிகாரங்கள் உண்டு.

கிரகங்களின் போக்கை உணர்ந்து, இப்போது என்ன தசா புத்தி நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். சில நேரங்களில் சனி திசையில் ராகு புக்தி, சனி திசையில் கேது புக்தி நடக்கும் போது டாக்டர்களிடம் போனா கூட அட்மிட் ஆகணும் சொன்னா கூட, செகன்ட் ஒபீனியன் கேளுங்க. தேர்ட் ஒபனீயன் கேளுங்க.

உங்கள் மகனை என்னவோ சொல்றீங்க. திடீரென்று மூட் அவுட்ல உங்க சட்டையைப் பிடிச்சிடுறான். ஐயோ, நான் வளர்த்ததே மார்ல பாயுதேன்னு அதிர்ச்சியாகி மூலையில முடங்காதீங்க. அந்த நேரம் பையன் கையால அவர் அடிவாங்குகிற நேரமாக இருக்கும். அதுல அதிர்ந்து நெஞ்சை பிடிச்சு உட்கார்ந்து, நான்காவது நாள் மாரடைப்பில் இறந்த தந்தையெல்லாம் உண்டு.

வளர்ந்த பையனையே நம்பி இருப்பாங்க. அவன் திடீரென்று இப்படி நடந்துவிட்ட பிறகு, அவ்வளவுதான்னு அதிர்ச்சியாயிடுவாங்க. இந்த மாதிரி பல நிகழ்வுகளெல்லாம் இதுல உண்டு. அதுல நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு புணர்ச்சி இல்லாமல் போவதும் உண்டு.

நல்ல உறவுகளின் அஸ்திவாரம் எது?

நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில விஷயங்களக் கற்றுக் கொண்டு,

அதை மனதில் பத்திரப் படுத்திக் கொள்கிறோம். விவேக முள்ளவர்கள், அந்த அனுபவங்களை தகுந்த தருணத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம். நிறையப்
பேர், நட்பில், காதலில், அன்பில் வெற்றி பெற, அடுத்தவர் எதிர்பார்ப்புகளப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள் கிறார்கள். உண்மயில் நீங்கள் திருப்திப்படுத்த வேண்டியது மற்றவரை அல்ல. உங்களைத்தான்.மேலே

இது சுயநலமல்ல. தன் மீது அன்போ, மரியாதையோ கொண்டிராத ஒருவர் அடுத்தவருடய அன்பை, மரியாதையை உய்த்துணர முடியாது

அப்படியெனில்,

அன்போ, நட்போ தொடர்ந்து நிலைத்திருப்பதன் ரகசியம் என்ன?

அன்பு வற்றாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும்!

ஜேனட்லூர் என்பவருடய 'Simple Loving' என்ற புத்தகம் சில எளிமயான யோசனகளை முன் வைக்கிறது.

உங்கள் அன்பு நன்கு மலர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில் மற்றவருக்கு உகந்த வகையில் நான் நல்லவனாக இருக்கவேண்டும். மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, உங்கள் மீதே மரியாதை கொள்ளு ங்கள். உங்கள் வாழ்க்கையையும், செயல்களையும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக செய்யுங்கள்.

உண்மயான அன்பு பணத்தை வைத்து எடை போடக் கூடாது. அல்ல பொருளை பகிர்வதோடு நின்று விடக் கூடா.

உங்கள் உறவுகளில் நீங்கள் தவறிழைக்கும் போது மற்றவர்கள் உங்களை மன்னித்து விட்டால் மட்டும் போதாது. நீங்களும் உங்களை மன்னிக்க வேண்டும்.

மற்றவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.

நீங்கள் மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது; அவர்கள் உங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும். ஏனென்றால் உங்கள் வாழ்க் கையை யாரும் வாழ முடியாது. உங்கள் வாழ் நாளில் நீங்கள் பார்க்கப் போகும் அத்தன பேரிலும், உங்களை விட்டுப் பிரியாத ஒரேயொருவர் நீங்கள் மட்டும்தான்.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக, உற்சாகமாக, அர்த்த முள்ளதாக வாழத் தொடங்கினால் போதும். உங்களுக்கு அமையும் உறவுகளும், மகிழ்வும் உங்களை விட்டு எளிதில் விலகி போகாது.

உங்கள் மனப்பான்மையைப் பொறுத்துத்தான் உங்கள் உறவு நீடிக்குமா, அல்ல

காற்றில் கரந்த கற்பூரம் போலாகுமா எனச் சொல்ல முடியும்.

மனப்பான்மை என்றால் என்ன?

உங்களைப் பற்றி, மற்றவர்களைப் பற்றி, உங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங் களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் நாளடைவில் உங்கள் நம்பிக் கையாக மாறி விடுகிறது. உங்களின் தீர்மானமான உணர்வுகள் நிரந்தர நிழலாய் மனதில் படிந்து விடுவதுதான் மனப்பான்மை

உங்கள் உறவுகளின் அஸ்திவாரமான மனப்பான்மை எவ்வாறு உருவாகிறது?

நேற்றைய வார்த்தைகள் இன்றைய செயல்கள்

இன்றைய செயல்கள் நாளைய மனப்பான்மைகள்

இன்றைய மனப்பான்மைகள் நாளைய குணங்கள்

இன்றைய குணங்கள் தாம் அவருடய நாளைய விதி!

எனவே ஆரோக்கியமான, வளர்ச்சியடையக் கூடிய மனநிலையை நாம் வளர்த்துக் கொண்டோம் என்றால் உறவுகள் இலேசில் புளித்துப் போகாது. ஐஸ்கிரீம் கலந்த அன்பு பேச்சுகள் எளிதில் அலுத்துப் போகாது.

ஆரோக்கியமான மனநிலைக்கு அடிப்படையே, நாம் நாமாக இருப்பதுதான்.

அன்பு என்பது ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கொள்வதல்ல. மாறாக இருவரும் சேர்ந்து ஒரே திசையில் பார்ப்பது. ஒருவர் அழகாக இருக்கிறார் என்பதற்காக நீங்கள் அவரை அன்பு செய்யக் கூடாது. நீங்கள் அன்பு செய்வதால்தான் அவர் அழகாக இருக்கிறார். ஷேக்ஸ்பியர் கேட்பது போல் கடவுள் உங்களுக்கென ஒரு முகத்தைக் கொடுத்திருக்கிறார்! நீங்கள் ஏன் வேறொரு முகத்தைத் தேடுகீறீர்கள்?

கோபென்ஹெகன் பல்கலக் கழகத்தின் இயற்பியல் தேர்வு நடந்து கொண்டிருந் தது. ஒரு பெரிய வானளாவிய கட்டிடத்தின் உயரத்தை ஒரு பாரோமீட்டர் உதவியுடன் எப்படிக் கணக்கிடுவது? ஒ உடனே ஒரு மாணவன் எழுந்து சொன்னான்.

பாரோமீட்டர் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி விட்டு அதை மெல்ல இறக் கவும். கயிற்றின் நீளம்+பாரோமீட்டர் நீளம்-இவயிரண்டயும் சேர்த்தால் கட்டடத்தின் உயரம் தெரியும்.

அந்த மாணவன் பெயிலாக்கப்பட்டான். எனினும் தனித்தன்மை வாய்ந்த பதிலைக் கூறிய அந்த இளஞன் சோர்ந்து விடவில்ல. தாமாகவே பிரச்னை '

களுக்குத் தீர்வு கண்டு வந்த அவரின் பெயர் தான் நீல்ஸ்போர். இயற்பியலுக் காக நோபல் பரிசு வாங்கிய ஒரே டேனிஷ் நாட்டவர்.

தனித் தன்மையுடன், இயல்பாக இருப்பதுதான் நாளடைவில் பெரும் வெற்றி களைப் பெற்றுத் தரும்.

ஒரு நாள் இரண்டு நண்பர்கள் கடலில் படகு ஓட்டி சென்றார்கள். பெரியவர் ஜிம் படகை ஓட்ட, சிறியவரோ, ஒரு முனையில் நின்று கொண்டு இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வந்தார்.

அன்றிரவு இருவரும் உணவருந்தும் போது ரே கேட்டார், ஜிம் காலையில் நாம் சென்ற கடற்கரைப் பகுதியில் நூற்றுக்கணக்கான பாறைகள், கோர புற்கள் இருந்தனவே? எப்படி ஒன்றில் கூட மோதாமல் ஓட்டினீர்கள்?

ஜிம் புன்னகைத்துக் கொண்டே சொன்னார்,

அங்குள்ள ஒவ்வொரு பாறையையும் நான் இடித்துப் பழகி விட்டேன்!

வாழ்க்கையில் நாம் படும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வதோடு, அத்தகைய வாழ்க்கை முறையிலிருந்து ஓடிவிடாமல், அதையே சிறப்பாக வாழ கற்றுக் கொள்பவர்தாம் சிறந்த மனிதர். நம்முடன் வாழ்பவர்களுக்கு வாழ்க்கை சுலபமாக அமையக் கூடும். நமக்கிருப்பது போன்ற துன்பங்கள் அவருக்கு வராமல் இருக்கக்கூடும். ஆனால் தொடர்ந்து போராடி வெற்றி பெறுங்கள். பிறகு உங்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தி யாசங்களை நீங்கள் உணர்வீர்கள்; கொஞ்ச காலத்தில் மற்றவர்களும் உணர்வார்கள்.

நான் கற்றுக் கொண்ட சில விஷயங்கள்: (பலருடைய அனுபவங்களிலிருந்து)

என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது. நான் செய்யக் கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்ன மாற்றிக் கொள்வதுதான். பிறகு அவர்கள் விருப்பம்.

ஒரு சிலர் மீது நான் எவ்வளவு அக்கறை காட்டினாலும் அவர்கள் மீண்டும் என் மீது அக்கறை காட்டுவதில்லை.

மற்றவர்களை ஒரு கால் மணி நேரத்திற்கு வேண்டுமானால் நம் அழகால் வசீகரப்படுத்தலாம். அதற்கு மேல் வசீகரப்படுத்த நமக்கு நாலு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி நான் அதிகம் கவலைப்பட தேவையில்லை. அவர்கள் அதை எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதான் எனக்கு முக்கியம்.

வாழ்க்கையில் எனக்குப் பிடித்த மனிதனாக நான் மாற நிறைய காலம் பிடிக்கிறது.

நான் அன்பு செய்பவரை விட்டுப் பிரியும் போது கனிவான வார்த்தையுடன் பிரிவது நல்லது. சிலசமயம் அவர்களை மீண்டும் சந்திக்காமலே போகக்கூடும்.

இனி இவர்களுடன் அன்போடு பழகவே முடியாது என நினத்த பிறகும், நீண்ட காலத்திற்கு அன்போடு பழகலாம்.

என் மனப் பான்மையை நான் கட்டுப் படுத்தாவிட்டால் அது என்னைக் கட்டுப்படுத்தி விடும்.

எவ்வளவுதான் ஒரு உறவில் உணர்ச்சிகள் தலைவிரித்து ஆடினாலும் அதையும் மீறி நல்ல காரணங்கள் இல்லாவிட்டால் ஒரு உறவு நீடிக்காது.

என்னை அன்பு செய்பவர்கள் நிஜத்தில் இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்றுதான் அவர்களுக்குத் தெரியவில்லை.

என் உற்ற நண்பருடன் சேர்ந்து ஏதாவது வேல செய்தாலும் சரி, சும்மா இருந்தாலும் சரி, அதைவிட மகிழ்ச்சியான நேரம் இருந்ததில்லை.

நான் வாழ்க்கையில் தவறு செய்துவிட்டு, என்னை இவர்கள் அவமானப்படுத்த போகிறார்கள் என்று யாரைக் கருதினேனோ அவர்கள்தாம் நிறைய சமயம் என்னத் தூக்கி விட்டிருக்கிறார்கள்.

நான் கோபப்படலாம். ஆனால் குரூரமாக நடக்கக்கூடாது.

நான் விரும்பும் வகையில் மற்றவர்கள் என்ன அன்பு செய்யவில்ல என்பதற்காக அவர்கள் என்னை அன்பே செய்யவில்ல என அர்த்தம் கிடயாது.

மரியசார்லஸ்

முதல் பாலுறவு வாழ்க்கை அனுபவம்

பாலுறவுச் செய்கையில் ஈடுபடுவோர் தாங்கள் படித்த நூலில் இருந்து அறிந்து கொண்ட பாலியல் திறன்களைப் போலன்றி தங்களுடைய திறன் குறைவாக இருப்பதாக உணரும்போது, தாழ்வு மனப்பான்மை கொள்கிறார்கள். இது அவர்களின் பாலுறவு வாழ்க்கையை பாதிக்கிறது.

முதன்முதலாக பாலுறவு கொள்வோருக்கு ஏமாற்றமே மிஞ்சும். பெண்ணுக்கு கன்னித்திரை என்ற தடுப்புச் சவ்வு இருப்பதால் பாலுறவின் போது வலியும், திருப்தியின்மையும் உணடாகும். முதலுறவின்போது பயம் ஏற்படுவதால் பிறப்புறுப்பு இறுக்கமாகக் காணப்படும். இவ்வாறாக ஆணுக்கு பாலுறவின்போது விரைப்பின்மை மற்றும் விரைவில் விந்து வெளிப்படுதல் ஆகியவையும் இருக்கும். இதெல்லாம் முதல் பயத்தினால் ஏற்படுபவை. இயல்பானவை என்பது பலருக்கு தெரியாது. இந்த நிலை நாளடைவில் சரியாகி விடும். அவ்வாறு இல்லாமல் தனக்குத் திறனில்லை என்ற எண்ணம் பதியும்போது எப்போதுமே சரியாக செயல்படாத நிலைதான் உண்டாகும்.

பலபெண்கள் பாலுறவின்போது மெய்மறந்து நிலை எனப்படும் உச்ச இன்பத்தை அடைவதே கிடையாது. ஆனால் அவர்கள் கருத்தரிப்பார்கள். இவ்வாறே சில ஆண்களுக்கு பாலுறவு கொள்ளும் போதே விந்து வெளியாகி விடும். இவ்வாறு விந்து சீக்கிரம் வெளியாவது தனது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறி என்பதை அறிந்திடாமல், நீண்ட நேரம் பாலுறவு கொண்டிருப்பதால் ஆண்மை என கருதும்போக்கு இருக்கிறது. ஆணும், பெண்ணும் பாலுறவு கொள்ள இரண்டு நிமிடம் போதுமானது என ஆய்வுகள் கூறுகின்றன. அவசரப் படாமல் பாலுறவு கொள்வோர், தங்கள் மணவாழ்க்கை முழுவதிலும் திருப்தியாக இருக்கிறார்கள்.

சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!

நாவல் பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச பழம். எங்க ஊருல நவ்வாப்பழம்னு பேச்சு வழக்குல சொல்வாங்க. ஆத்தோரமா வளந்திருக்குற நாவல் மரங்கள்ல போட்டி போட...