பொதுவாக கருமுட்டை உற்பத்தி இருக்கும் வரை பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் சில பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வரன் அமைவதில்லை. அதனால் திருமணம் தாமதமாகிறது.
மேலும் வேலை பார்க்கும் பெண்களில் சிலர் உயர் பதவியை பெற வேண்டும், வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதித்த பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள னர். இதனாலும் அவர்களின் திருமணம் தள்ளிப் போகிறது.
இதுபோன்று 30 முதல் 35 வயதுக்கு மேல் திருமணம் செய்யும் பெண்கள் குழந்தை பெற உறைய வைத்த கருமுட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
திருமணத்துக்கு தாமத மாகும் நல்ல உடல்நலமுள்ள பெண்ணின் கருமுட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. அவை மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் சீதோஷ்ணத்தில் திரவ நைட்ரஜனில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. அந்த கருமுட்டை செயல் இழக் காமல் இருக்க அதற்கு ஹார்மோன்கள் ஊசிமூலம் செலுத்தப்படுகின்றன.
இவ்வாறு பாதுகாக்கப்படும் கருமுட்டைகளை 30 முதல் 40 வருடங்கள் வரை பாதுகாக்க முடியும். இந்த கருமுட்டையின் மூலம் தேவையானபோது பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
கருமுட்டையை உறைய வைக்க ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகும். அவற்றை பாதுகாக்க ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் தேவைப்படும். இந்த தகவலை கருவூட்டல் நிபுணர் டாக்டர் கிரிஷிகேஷ்பை தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!
நாவல் பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச பழம். எங்க ஊருல நவ்வாப்பழம்னு பேச்சு வழக்குல சொல்வாங்க. ஆத்தோரமா வளந்திருக்குற நாவல் மரங்கள்ல போட்டி போட...
-
பொடுகு என்றால் என்ன ? தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கி...
-
இன்றைய மக்களுள் சிலர் எடை அதிகமாக உள்ளது என்பதற்காக அதை குறைக்க நிறைய முயற்சிகளை எடுக்கின்றனர். அதே சமயம் சிலர் எடை அதிகமாகவில்லை என்று அ...
No comments:
Post a Comment